நான் இருக்கிறேன்!

   

நான் இருக்கிறேன்!

நற்செய்தி: யோவான் 8:56-58.

56உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.57அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.58அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

நல்வழி:

“நான்” என்ற சொல்லின் உறுதி,

நம்பும் இறையில்தான் உண்டு.

வான் வந்த வட்டப் பரிதி

வடிவு மகனிடமும் உண்டு.

ஏன் என்று கேட்கும் தாழ்வு,

இங்கொழிய என்ன உண்டு?

தேன் ஒழுகும் நிலை வாழ்வு,

தெய்வ வாக்கில்தான் உண்டு!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

இறை அறிவு!

இறையறிவு!

நற்செய்தி: யோவான் 8:54-55. 54.

இயேசு பிரதியுத்தரமாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.55. ஆயினும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன்; அவரை அறியேன் என்று சொல்வேனாகில் உங்களைப்போல நானும் பொய்யனாயிருப்பேன்; அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டிருக்கிறேன்.

நல்வழி:

இறை அறிவுள்ளவர் நீவிர் என்றால்,

ஏன் இறுமாப்பு கொண்டுள்ளீர்?

குறை குற்றங்கள் பிறரில் கண்டால்,

குறுமதி உணவே உண்டுள்ளீர்.

முறை தவறாமல் முழங்கால் நின்றால்,

முதலில் உள்வினை கண்டிடுவீர்.

நிறைவறிவாகிய நேர்மை வந்தால்,

நிமிர்ந்து, நன்மை பண்ணிடுவீர்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

படைப்பின் அழகு!

படைப்பின் அழகு!


படைப்பின் அழகைப் பார்க்கும்போது,

படைக்கும் இறையைப்  பார்ப்போமே.

கிடைக்கும் பொருளைச்  சேர்க்கும்போது,

கொடுக்கும்  அறிவும் சேர்ப்போமே.

உடைக்கும் நம் வினை தோற்கும் என்று,

உணர மறுப்பின், தோற்போமே.

 துடைக்கும் மகனே ஏற்பார் இன்று;


தூய ஆவியில் ஏற்போமே!

-கெர்சோம் செல்லையா. 

யோவான் 8:51-53.

நல்வழி: 


வீட்டுப் பிள்ளையை வேலைக்காரர்,

விரும்பாப் பேயென விரட்டுகிறார். 

கூட்டுச் சேர்ந்து, கூக்குரல் போட்டு,

கொடியவனாக்கப் புரட்டுகிறார்.

கேட்டுப் பார்த்தால், கிறித்து நல்கும்,

கேடிலா வாக்கை யார் தருவார்?

நாட்டோர் நாட்டம் நஞ்சேயென்றால்,

நல் வாழ்வை யார் பெறுவார்? 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

தன்னலமில்லாப் பணி!

தன்னலமில்லாப் பணி!
நற்செய்தி: யோவான் 8:50. 

என்னை உயர்த்தும் என் சொற்கள்,

 எந்தப் பயனும் தருவதில்லை.

முன்னே நிற்பவர் புகழுரைகள்,

முடிவு மட்டும் வருவதில்லை. 

பின்னே புகழ்ச்சி நமக்கெதற்கு?

பேசி எவரும் பெறுவதில்லை.

தன்னலமில்லாப் பணி செய்வோம்;

தருகிற மேன்மை அறுவதில்லை!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

பழிச் சொற்கள்!

பழிச்சொற்கள்!
நற்செய்தி: யோவான் 8:48-49. 

நல்வழி:


தொண்டு வாழ்வின் தூய்மை புரியார்,

தொண்டின் ஊற்றைத் தூற்றிடுவார். 

உண்டு கொழுப்பதை உயர்வாய் நினைப்பார்,

உண்மையைப் பொய்யாய் மாற்றிடுவார். 

கண்டு கொள்ளாதவராகத் தெரியும்,

கடவுள் நடுவாராய் வீற்றிடுவார். 

வண்டு பறப்பது போல் பழி ஓடும்;

வான் புகழாரமும் சாற்றிடுவார்! 

ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

செவி திறப்போம்!

செவி திறப்போம்!

நற்செய்தி: யோவான் 8:47.

நல்வழி:


முன்னர் படைத்தது மண்ணிற்காக. 

முதலில் இருந்தது இப்படியாக. 

பின்னர் படைப்பது விண்ணிற்காக. 

பிறப்போம் நாமும் அப்படியாக. 

இன்னரும் பேறு பெறுவதற்காக,

இரண்டு செவியும் திறப்போமாக.

சொன்னவர் இயேசு, அருள்வாராக. 

சொற்படி வாழ்ந்து சிறப்போமாக!


ஆமென்.

-கெர்சோம் செல்லையா. 

யார் உரைப்பார்?

யார் சொல்லக் கூடும்?
நற்செய்தி: யோவான் 8:46. 

நல்வழி: 

என்னில் தீது இல்லையென்று 

என்னால் சொல்லக் கூடுமோ? 

சொன்னால் அது உண்மையென்று,

சொல்கேள் கூட்டம் ஆடுமோ?

இன்னாள் இதனைச் சொல்வதற்கு,

இயேசு தவிர யாருண்டு?

பின்னாள் அவரே நடுவரென்று,

பிழை உணரப் பேருண்டு!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.  

நம்பு!

நம்புவோமா?

நற்செய்தி: யோவான் 8:45.45.

நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை.

நல்வழி:

கண்ணில் தூய்மை காணாவிட்டால்,
காட்சி எங்ஙனம் தெளிவாகும்?
புண்ணின் நெஞ்சு நாணாவிட்டால்,
புரையும் எப்படி வெளியேறும்?
மண்ணின் தீமை கொண்டவர் நாமே.
மனதின் பொய்மை கரைத்திடுவோம்.
விண்ணின் உண்மை கண்டவராகி,
விடுதலை வாக்குரைத்திடுவோம்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா. See less

நாலடி நற்செய்தி!

நாலடி நற்செய்தி!


என் ஆசிரியர்!


என்னக ஒளியில், இறையருளோடு,

பன்னிலையாளர்  தூண்டலுண்டு.

முன்னிலை  நிற்கும் என்னாசிரியர்,

நன்கு வாழ்வர், வேண்டலுண்டு!


-கெர்சோம் செல்லையா.