எல்லோருக்கும் சொல்லுவோம்!

எருசலேம் தொடங்கி…….

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:47-48.  

கிறித்துவில் வாழ்வு: 
எருசலேம் தொடங்கி எல்லா நாடும் 
இறை அரசிற்குள் வரவேண்டும்.  
குருசு வழியில் அன்பைப் பாடும்   

கிறித்துவின் மீட்பு உறவேண்டும். 

ஒரு சிலர் மட்டும் ஓங்கப் போடும் 
ஒவ்வாத் திட்டமும் அறவேண்டும். 
அருளும் நலமும் நிரம்பிக் கூடும்;

அனைவரும் ஆசி பெற வேண்டும்!   

ஆமென்.  
-கெர்சோம் செல்லையா. 

எருசலேம் தொடங்கி…….

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:47-48.  

கிறித்துவில் வாழ்வு: 
எருசலேம் தொடங்கி எல்லா நாடும் 
இறை அரசினில் வரவேண்டும்.  
குருசு வழியில் அன்பைப் பாடும்   கிறித்துவின் மீட்பு உறவேண்டும். 

ஒரு சிலர் மட்டும் ஓங்கப் போடும் 
ஒவ்வாத் திட்டமும் அறவேண்டும். 
அருளும் நலமும் நிரம்பிக் கூடும்
ஆண்டவர் ஆசி பெற வேண்டும்!   

ஆமென்.  
-கெர்சோம் செல்லையா. 

குருதியின்றி மீட்பு இல்லை!

குருதி கொடாது மீட்பு வராது!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:45-46.

கிறித்துவில் வாழ்வு:  
குருதி கொடாது மீட்பு வராது; 
குறித்துச் சொன்னது திருச்சட்டம். 
இறுதியில் இறையும் மகவாய்ப் பிறந்து, 
இறந்து மீட்பதே இறைத்திட்டம்! 
பெருகிடும் சூது ஒழிக்க முயன்று, 

பேசி வடித்தது திருச்சட்டம்.  
உறுதி மொழியும், உயிரும் ஈந்து,  
உயிர்த்து வருவதே இறைத்திட்டம். 
ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

முன்னுரைத்தது!

அன்றே உரைத்தார்!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:41-44. 

44. அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார். 

வியந்து மகிழ்ந்து பார்ப்பதுவை,  
விண்ணருட் பற்று என்னாதீர். 
நயந்து ஊனுடை வழங்குவதை, 
நம்புதலென்றும் எண்ணாதீர். 
அயர்ந்து சோர்ந்து போகாதீர்; 
அன்றே உரைத்தார், ஆய்ந்திடுவீர்.   
இயம்பு நூலின் நிறை கண்டு, 
இயேசு மார்பில் சாய்ந்திடுவீர்!
ஆமென்.  

தொட்டுப்பார்த்துச் சொல்லுங்கள்!

தொட்டுப் பார்த்துச் சொல்லுங்கள்!  
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 24:38-40.  
38. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
39. நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
40. தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.  


கிறித்துவில் வாழ்வு: 


தொட்டுப் பார்த்துச் சொல்லுங்கள்.

தூயன் உயிர்ப்பு பொய்யன்று . 

கட்டிப் பிடித்துச் சொல்லுங்கள்;  

காணும் காட்சி பொய்யன்று. 

தட்டும் நெஞ்சுள் சொல்லுங்கள். 

தந்தை மைந்தன் மெய்யென்று.  

எட்டுத் திக்கும் சொல்லுங்கள்; 

இயக்கும் ஆவியர் மெய்யென்று.  


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

அமைதி!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:36-37.  

கிறித்துவில் வாழ்வு:  
மாண்டிடும் மனிதக் காட்டினிலே, 
மண்டிக் கிடக்குமே அச்சம். 
தோண்டியெடுத்துப் பார்க்கையிலே,  
தொடர்ந்தும் வருமே மிச்சம். 
வேண்டிடும் அடியார் வீட்டினிலே, 
விளைந்து நிற்குமே அமைதி.  
ஆண்டவர் அருள்வது காண்பதற்கே,   
அழைப்பு ஏற்று வா நீ!  
-ஆமென். 

ஒரு மூலையிலிருந்து!

இழிவிலிருந்து இந்நாட்டை….எகிப்தில் அடிமையாயிருந்த யூதர்கள், உழைப்பால் உயர்ந்தது, உலக வரலாறு. ஒடுக்கப்பட்டு, துரத்தப்பட்டு, மரம் ஏறிய நாடார்கள், உழைத்து முன்னேறியது தென்னிந்திய வரலாறு. பள்ளம் தள்ளப்பட்ட பள்ளர்கள், உழைத்து முன்னேறி வருவது இன்றைய வரலாறு. இப்படி முன்னேறியவர்கள், இப்போது மற்றவர்களை எப்படிப் பார்க்கிறார்கள்? யூதர்களின் பார்வையில் ஆணவம் தெரிகிறது. நாடார்களின் பார்வையில், ‘நமக்கும் கீழே’ என்ற எண்ணம் தெரிகிறது. ‘பள்ளர்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள்’ என்ற கருத்தும் பரவுகிறது. இப்படி, ஒவ்வொரு சாதியினரும், மற்றவரை மதிக்க மறந்து, மற்றவரும் மனிதர் என்று நினைக்க மறந்து, தவறிக்கொண்டே இருக்கின்றனர். இத்தவற்றை, அறிவு என்று கூறினாலும், ஆளுமை என்று நினைத்தாலும், முன்னோர்கள் செய்ததாயினும், இன்னாளில் செய்வதாயினும், தவறு தவறேதான். தவற்றிலிருந்து பிறப்பதும் தவறேதான்! இத்தவற்றை நீக்கும் ஒரேவழி, மாற்றாரை மதிக்கக் கற்றலே; மதிக்கும் அறிவு பெற்றலே. இறைமுன்னும், இந்நாட்டுச் சட்டம் முன்பும், யாவரும் ஒன்றே. எந்த இனத்தையும் உயர்த்தாதீர்கள். எந்த மனிதனையும் தாழ்த்தாதீர்கள்! உயர்வுமில்லை, தாழ்வுமில்லை. யாவரும் ஒன்றே! இவ்வறிவை வழங்கும் கல்வியே இன்றையத் தேவை. இவ்வறிவு பெற்றவர்களே, ஆசான்களாவீர், ஆசிரியர்களாவீர், அரசியல் தலைவர்களாவீர்; அறம் சார்ந்த அறிவைப் பரப்புவீர். இழிவிலிருந்து இந்நாட்டை நல்வழிப்படுத்துவீர்!

-கெர்சோம் செல்லையா.

கொழுந்துவிட்டு எரியட்டும்!

கிறித்துவில் வாழ்வு:  
கொழுப்படைந்த எங்கள் நெஞ்சம்,  
கொழுந்துவிட்டு எரியட்டும்.  
அழுக்கடைந்து அதனால் மிஞ்சும், 
அவையக்கட்டு உருகட்டும். 

இழுக்கு வந்து இழுக்கும் முன்னம்,  
இறையின் வாக்கு புரியட்டும். 
ஒழுக்கமின்மை உயரா வண்ணம், 
உண்மை வாழ்வு தெரியட்டும்!  
ஆமென். 
-கெர்சோம் செல்லையா. 

திருந்துதலே விருந்து!

திருந்துதலே விருந்து!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:30-31.  

கிறித்துவில் வாழ்வு: 
விருந்தினரென்று வீட்டில் வந்து,  
விருந்தளிப்பவர் இயேசு.  
இருந்துமில்லா கண்கள் திறந்து, 
இறைவன் முன்பு பேசு.  
வருந்திச்சேர்த்தும் பயன் தராது,   
வாழ்வளியா காசு.   
திருந்துதல்தான் விருந்து இன்று; 

தேவையற்றவை வீசு!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.  

பின்னால் நிற்கும் இயேசுவுக்கே!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:28-29.  

கிறித்துவில் வாழ்வு:  
முன்பின் தெரியார் என்றாலும், 
முகம் அறியார் வந்தாலும், 
அன்பாய் ஏற்று அமுதளிக்கும், 
அரிய பண்பைக் கொண்டோமா?
இன்னாள் இப்படி நாம் செய்யும்,      
எல்லா நன்மை உதவிகளும்,  
பின்னால் நிற்கும் இயேசுவுக்காம்; 
பிறரில் இறையைக் கண்டோமா? 
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.