ஒரு வாக்கு போதும்!

ஒரு வாக்கு போதும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:6-8.
6 அப்பொழுது இயேசு அவர்களுடனேகூடப்போனார். வீட்டுக்குச் சமீபமானபோது, நூற்றுக்கு அதிபதி தன் சிநேகிதரை நோக்கி: நீங்கள் அவரிடத்தில் போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல;
7 நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.
8 நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான்; என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான்.

கிறித்துவில் வாழ்வு:
எருவாக்கி எம்மை இழிநிலை தள்ளும்,
ஏற்றத் தாழ்வின் உலகத்திலே,
திருவாக்குரைத்துத் தீமைகள் அகற்றும்;
தெய்வமே, உம்மை அண்டிவந்தோம்.
உருவாக்கின நாள் உரைத்ததுபோன்று,
உமது வல்லமை வெளிப்படவே,
ஒரு வாக்குரைப்பில் நோய்கள் அகலும்;
உம்மிடம் மட்டும் மண்டியிட்டோம்!
ஆமென்.

Image may contain: text
LikeShow More Reactions

மாற்று சமய மக்கள்!

மாற்று சமய மக்கள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:
1 அவர் தம்முடைய வார்த்தைகளையெல்லாம் ஜனங்களுடைய காதுகள் கேட்கும்படி சொல்லி முடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார்.
2 அங்கே நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான்.
3 அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான்.
4 அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைக் கருத்தாய் வேண்டிக்கொண்டு: நீர் இந்தத் தயவுசெய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான்.
5 அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெபஆலயத்தையும் கட்டினான் என்றார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
மாற்று சமய மக்களும்கூட
மதித்து இயேசுவை நோக்குகிறார்.
ஏற்று அறியும் நெஞ்சற்றோரே,
இழிவாய் ஏசித் தாக்குகிறார்.
தூற்றுகின்றார் என்று வருந்தித்
தொடர்பை முறித்துச் செல்லாதீர்.
காற்று வீசும், கனிவார் அவரும்.
கனவு என்று சொல்லாதீர்!
ஆமென்.

Image may contain: 4 people, including Julius Karunakaran, outdoor
LikeShow More Reactions

Comment

பாறையுள் தோண்டிக் கட்டியவர்!

பாறையுள் தோண்டிக் கட்டியவர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:46-49.
46 என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?
47 என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குச் காண்பிப்பேன்.
48 ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக் கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
49 என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்; நீரோட்டம் அதின்மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
நல்லார் பொல்லார் எனப்பார்த்து,
நாட்டில் வருமோ புயல்காற்று?
எல்லாரையும் அது தாக்கும்;
எனினும், நம்மை இறை காக்கும்.
பொல்லார் மணல்மேல் ஆள்கின்றார்;
புயலில் விழுந்து, மாள்கின்றார்.
இல்லார் இறைகீழ் தாழ்கின்றார்;
இதனால் நிலைத்து வாழ்கின்றார்.
ஆமென்.

எப்படித் தெரியும்?

எப்படித் தெரியும்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:43-45.
43 நல்ல மரமானது கெட்ட கனிகொடாது, கெட்ட மரமானது நல்ல கனிகொடாது.
44 அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச் செடியில் திராட்சப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை.
45 நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.
 
கிறித்துவில் வாழ்வு:
மண்ணின் செழுமை மரங்களில் தெரியும்.
மரத்தின் தன்மை கனிகளில் தெரியும்.
கண்ணாம் விளக்கில் காட்சிகள் தெரியும்.
காட்சியை ஆய்ந்தால் கருத்தும் புரியும்.
உண்மை, பொய்மை எப்படித் தெரியும்?
உரைக்கும் வாக்கின் செயலில் தெரியும்!
விண்ணின் விருப்பு யாருக்குத் தெரியும்?
விரும்பிப் பணிவோம், நமக்கும் புரியும்!
ஆமென்.

உத்திரம் மறந்து துரும்பைத் திட்டும்

உத்திரம் மறந்து துரும்பைத் திட்டும்,
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:41-42.

41 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
42 அல்லது நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.

கிறித்துவில் வாழ்வு:
உத்திரம் ஒன்றைக் கண்ணில் வைத்து,
ஒருசிறு துரும்பைத் திட்டுகிறேன்.
பித்தளையாகப் பல்லை இளித்து,
பொன்மேல் சினத்தைக் கொட்டுகிறேன்.
நித்தமும் தவற்றால் நெஞ்சை நிரப்பி,
நிம்மதி இழந்து முட்டுகிறேன்.
பித்தனாய் நானும் மாறாதிருக்க
பேரருட் கதவைத் தட்டுகிறேன்!
ஆமென்.

Image may contain: text
LikeShow More Reactions

Comment

செல்லேன்! செல்வேன்!

செல்லேன்! செல்வேன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:39-40.
39 பின்னும் அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?
40 சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்.

கிறித்துவில் வாழ்வு:
குழி எது, குன்றெது அறியாதவரும்,
கொடுமை, நன்மை புரியாதவரும்,
வழி இது, வாழ்வது தெரியாதவரும்,
வழி காட்டுகிறார், செல்லேனே!
பழி இது, மீள்வது என நன்கறிந்து,
பண்பின் செயலை மட்டும் புரிந்து,
மொழிவது மெய்யோ எனத்தெரிந்து,
மொழிந்தால் அவருடன் செல்வேனே!
ஆமென்.

கொடுப்போம்,கொடுப்பார்!

கொடுப்போம்,கொடுப்பார்!
கிறித்துவின் வாக்கு :லூக்கா 6:38.
 
38 கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.
 
கிறித்துவில் வாழ்வு:
எடுக்கும் எண்ணம், என்னில் பெருக்கம்.
இதனால்தானே அலைகின்றேன்.
கொடுக்கும் பண்பும் அளவில் சுருக்கம்;
கொடாததினால் தொலைகின்றேன்.
தடுக்கும் நெஞ்சை எடுத்து மாற்றும்;
தாழ்வின் நிலையை நினைக்கின்றேன்.
ஒடுக்கப்பட்டோர் வாழ்வை ஏற்றும்;
உதவ எனையும் பிணைக்கின்றேன்.
ஆமென்.

என் முகம் முதுகு தெரியவில்லை!

என் முகம் முதுகு தெரியவில்லை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:37.

37 மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.

கிறித்துவில் வாழ்வு:
இரண்டு கண்கள் என்முன்னிருந்தும்,
என்முகம், முதுகு தெரியவில்லை.
உருண்டு திரண்டு அவைகள் உழன்றும்,
உடன் நிற்பவரைப் புரிவதில்லை.
முரண்டு பிடிக்கும் எனக்கு வேண்டும்,
முழுமை காட்டும் கண்ணாடி.
பிறண்டி, பிறரைப் பழிக்காத்திருக்க,
பிடிப்பேன் திருமறை முன்னாடி!
ஆமென்.

Image may contain: 1 person

இரக்கம் என்பது இறைவனின் பண்பு!

இரக்கம் என்பது இறைவனின் பண்பு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:35-36.
35 உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.
36 ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.

கிறித்துவில் வாழ்வு:
இரக்கம் என்பது, இறைவனின் பண்பு;
இயேசுவில் கண்டேன், இந்த அன்பு.
அரக்கர் என்று, அகற்றுதல் தப்பு;
அனைவரும் இறையின் சாயல் படைப்பு.
சிறக்கும் இந்த தன்மை கொண்டு,
செயல்படுவோர்க்கு வாழ்வு உண்டு.
உருக்கம் பெருக, ஊழியம் பண்ணு;
உள்ளில் அன்பு, இலையேல் மண்ணு.
ஆமென்.

Image may contain: 1 person, sitting, outdoor and water
LikeShow More Reactions

யாவருக்கும் கொடுத்தலே அன்பு!

யாவருக்கும் கொடுத்தலே அன்பு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:32-34.

32 உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே.
33 உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே.
34 திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன்கொடுக்கிறார்களே.

கிறித்துவில் வாழ்வு:
நன்மை செய்வார் என்று பார்த்து,
நாமும் சிலர்க்குக் கொடுக்கிறோம்.
வன்மம் கொண்டார் வரிசை சேர்த்து,
வாழ்வில் பலரை விடுக்கிறோம்.
என்னே இறையின் விருப்பறிந்து,
இங்கு நன்மை செய்பவர் யார்?
இன்னாராகப் பிரித்தது போதும்;
யாவருக்கும் உதவப் பார்!
ஆமென்.

Image may contain: text