தாங்கும் இறைவன்!


​படைத்தவர் நம்முடன் வருவது பாரீர்!

நற்செய்தி மாலை: மாற்கு 4:40-41.

“பின் அவர் அவர்களை நோக்கி, ‘ ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா? ‘ என்று கேட்டார்.41 அவர்கள் பேரச்சம் கொண்டு, ‘ காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ! ‘ என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.”
நற்செய்தி மலர்:
ஆழ் கடலில் அமிழும் சூழல்;
ஆயினும் இயேசுவின் அருள் நம்முள்ளில்.
பாழ் பட்டோம் எனப்பதறாதீர்.
படைத்தவர் நம்முடன் இருப்பது பாரீர்!
வாழ்விழந்தோர் என்றவர் இன்று,
வாழும் உயர்நிலை கண்டு அறிவீர்.
தாழ்விடத்தில் விழுந்த இவனும்,
தாங்கும் இறையால் எழுந்ததைத் தெரிவீர்!
ஆமென். 

விடுதலை நாள் வாழ்த்துகள்!

விடுதலை நாள் வாழ்த்துகள்!

விடுதலை என்று முழங்கிடுவோம்;
வேண்டாம், குடியை விட்டிடுவோம்.
கெடுதலைக் கொணரும் வெறியத்தைக்
கீழே ஊற்றிக் கொட்டிடுவோம்.

எடுத்துரைக்கும் இவனுந்தான்,
என்றோ ஒருநாள் விட்டதினால்,
கொடுத்து உயர வளர்ந்திட்டான்;
குடும்பத்தோடு மகிழ்ந்திட்டான்.
விடுதலை என்று முழங்கிடுவோம்;
வேண்டாம் குடியை விட்டிடுவோம்!

அடுத்து நிற்கும் குழந்தைகளின்
அழகிய முகத்தைக் கண்பாரும்.
படுத்து புரள்வதை விட்டுவிட்டு,
பாரதம் எழும்ப நீர் வாரும்!
விடுதலை என்று முழங்கிடுவோம்;
வேண்டாம் குடியை விட்டிடுவோம்!

-கெர்சோம் செல்லையா.

நற்செய்தி மாலை's photo.

அனைத்துமே கீழடங்கும்!


​அனைத்துமே கீழடங்கும்!

நற்செய்தி மாலை: மாற்கு 4:39

“அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்து கொண்டார். கடலை நோக்கி, ‘ இரையாதே, அமைதியாயிரு ‘ என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று.”
நற்செய்தி மலர்:
காற்றடங்கும், கடலடங்கும்,
கடும் புயலும் வலுவடங்கும்,
நேற்று நம்மைத் தூற்றியவர்
நெய்த பழிச் சொல்லடங்கும்.
ஏற்றமிகு இறைமகனார்
இயம்புகின்ற வாக்கின் முன்,
ஆற்று வெள்ளம் ஓடுதல் போல்,
அனைத்துமே கீழடங்கும்!
ஆமென்.