தன்னலமில்லாப் பணி!

தன்னலமில்லாப் பணி!
நற்செய்தி: யோவான் 8:50. 

என்னை உயர்த்தும் என் சொற்கள்,

 எந்தப் பயனும் தருவதில்லை.

முன்னே நிற்பவர் புகழுரைகள்,

முடிவு மட்டும் வருவதில்லை. 

பின்னே புகழ்ச்சி நமக்கெதற்கு?

பேசி எவரும் பெறுவதில்லை.

தன்னலமில்லாப் பணி செய்வோம்;

தருகிற மேன்மை அறுவதில்லை!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.