2018

இத்தனை ஆண்டுகள்…..
இத்தனை ஆண்டுகள் எனக்கீந்த,
இறைவா உனக்கென என் செய்தேன்?
பித்தனாய்ப் பொருளைச் சேர்ப்பதற்கு,
பெரும்பிழை அம்புகள்தான் எய்தேன்!
அத்தனைச் செயல்களும் வீணென்று,
அறிந்தபின் உன்னிடம் நான் வந்தேன்.
சித்தம் இனிமேல் உனதென்று
செய்திடும் உறுதியில் எனை ஈந்தேன்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
Virus-free. www.avast.com

இறைவா எனை நீ ஆளவேண்டும்!

இறைவா எனை நீ ஆளவேண்டும்!

உண்மை மட்டும் பேச வேண்டும்;
ஒழுக்கத்தில் நான் வாழ வேண்டும்.
நன்மை செய்யும் நெஞ்சு வேண்டும்;
நாட்டோருக்கு உதவ வேண்டும்.
விண்ணை முட்டும் அன்பு வேண்டும்;
விடுதலை ஈயும் வீரம் வேண்டும்.
எண்ணம் எதிலும் தூய்மை வேண்டும்;
இறைவா எனை நீ ஆளவேண்டும்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: text
LikeShow More Reactions

Comment

இரக்கம் கொள்வோம்!

இரக்கம் கொள்வோம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:53-55.

53 பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.
54 நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து,
55 தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள்.

கிறித்துவில் வாழ்வு:
இரக்கம் இல்லாச் செல்வந்தர்,
இரக்கும் நிலைக்கு வருவாரே.
சரக்கு போன்ற கல் நெஞ்சர்,
சரிவர விளைச்சல் பெறுவாரே.
அரக்கத் தன்மை கொண்டவர்க்கு,
அழிவு உறுதி, அறிவீரே.
உரக்கச் சொல்லும் இவ்வுண்மை,
உணர்ந்தால் வாழ்வு பெறுவீரே!
ஆமென்.

Image may contain: one or more people and outdoor

கடவுள் இல்லை!

கடவுள் இல்லை!

சாதிகள் பகுத்ததும் கடவுள் இல்லை.
சமயங்கள் வகுத்ததும் கடவுள் இல்லை.
நீதியை விடுவதும் கடவுள் இல்லை. 
நேர்மை இலாரில்தான் கடவுள் இல்லை!
ஆதியின் முன்பும் மனிதர் இல்லை.
அனைத்தும் படைக்கையில் நாமும் இல்லை. மீதியிருப்பதை ஆய்ந்தறிவோம்; மீண்டும் சொல்லோம் கடவுள் இல்லை!

– கெர்சோம் செல்லையா.

Image may contain: 3 people, people smiling, text
LikeShow More Reactions

Comment

முதலில் மதிக்கத் தொடங்குவோம்!

முதலில் மதிக்கத் தொடங்குவோம்!

வயலில் வேலை

செய்தால்தான்,

வாய்க்குச்சுவையாய்,
சோறு வரும்.

வருவாய் இல்லை,
விட்டு விட்டால்,

வாழ நமக்கு
ஏது தரும்?

முயலும் உழவன்
முன் வந்தால்,

முதலில் மதிக்கக்
கற்று விடும்.

முற்காலத்துப்
பிழை நீக்கி,

முற்றும் நன்மை
பெற்று எடும்!

(கெர்சோம் செல்லையா)

Image may contain: 1 person, smiling, beard, outdoor and close-up
LikeShow More Reactions

Comment

யார் கடவுள்?

யார் கடவுள்?

உண்மையின் உருவே கடவுள்.
ஒளியின் அறிவே கடவுள்.
பண்பின் நிறைவே கடவுள்.
படைத்து மீட்பவர் கடவுள்.
அன்பின் வடிவே கடவுள்.
அதற்கெனப் பிறந்தவர் கடவுள்.
நன்மையின் ஊற்றே கடவுள்.
நம்முள் உண்டோ கடவுள்?

– கெர்சோம் செல்லையா.

Image may contain: people standing, tree, grass, sky, outdoor and nature
LikeShow More Reactions

Comment

பொய் துறப்போம்!

பொய் துறப்போம்!

எத்தனை வகையாய்ப் பொய்யுரைத்தோம்?
எவ்வாறெல்லாம் அதை மறைத்தோம்?
அத்தனை செய்தும்,நேர்மை என்றோம்.
அறவழி அறியாதே சென்றோம்.

இத்தனைத் தவறுகள் இனி தொடர்ந்தால்,
எவரும் மதியார், இதை மறந்தோம்.
பித்தராய் வாழ்வை இழக்காது,
பேரருள் பெற்றிட, பொய் துறப்போம்!

-கெர்சோம் செல்லையா.
!

Image may contain: 1 person, text
LikeShow More Reactions

Comment