2025

2025 -ஆம் ஆண்டு வாழ்த்து!

தோண்டும் மனிதர் தொடர்ந்தாலும்,

தொடக்க நாளை அடையவில்லை.

ஆண்டுகள் ஆயிரம் கடந்தாலும்,

ஆண்டவராண்டோ முடியவில்லை.

மாண்டவர் எச்சமே தூக்கினோம்;

மனித அறிவில் விடியலில்லை.

வேண்டியே இறையை நோக்குவோம்;

விண்வாழ்வுறத் தடையுமில்லை!

-கெர்சோம் செல்லையா.

May be an image of text

ஏன் இறைவன் மனுவாய்ப் பிறந்தார்?

என்கிற கேள்விக்குப் பதிலென்ன?

வான் விடுத்து எவர்தான் வருவார்?

வையம் இறங்கிட ஏது என்ன?

நான் என்கிற தீவினை பெருத்து,

நானிலம் கெட்டு விழுந்ததினால்,

தான் பெற்ற மக்களை மீட்க,

தந்தையன்பாய் மகனளித்தார்!

(யோவான் 3:16)

May be an image of 2 people

புதிய ஏற்பாடு!

ஒவ்வொன்றிற்கும் ஒருவேளையுண்டு;

உரைப்படி வாக்கும் பிறந்தது.

எவ்விதமான பகட்டும் தவிர்த்து,

எளிமையின் ஆவி புரிந்தது.

கவ்விடும் நிந்தை கத்தியாயுண்டு;

கன்னியின் நெஞ்சோ திறந்தது.

இவ்விதமான திருமகன் பிறப்பு,

யாவற்றிலுமே சிறந்தது!

(லூக்கா 1)

No photo description available.

வருவார் என்கிற வாக்கின்படியே,

வையத்தாரிறை காத்திருந்தார்.

தருவார் அவரும் தகுந்த அரசே;

தாமதமாயினும் பார்த்திருந்தார்.

இருயிரு நூறு ஆண்டுகளாகியும்,

ஏனோ இறைவன் பேசவில்லை.

ஒருவரும் அறியா அந்த மௌனம்,

உடைக்குமறிவும் வீசவில்லை!

May be an image of text

மெசையா என்கிற மீட்பருளாளர்,

மேதினி ஆள வருவாரா?

அசையா அரசை அவரும் அமைத்து,

அன்புடன் நீதி தருவாரா?

இசைவாயெழுதிய இறைப்பேரரசை,

எந்நாட்டவரும் பெறுவாரா?

தசையாய் நாமும் உயிருள் இணைய,

தாமதியாயிறை வருவாரே!

-கெர்சோம் செல்லையா.

www.thetruthintamil.com

May be an image of text

இப்படி இவர்கள் எழுதிய நூற்கள்,

இசரயெல் என்று இருந்தாலும், 

ஒப்பிட இயலா இறையின் திட்டம்,

உலகம் முழுதும் மீட்பதுதான். 

அப்படி மீட்க வருபவர் குறித்து, 

அறிவிக்கும் முன் வாக்குகளில், 

தப்பிதமென்று ஒன்றும் இல்லை;

தரணி மீளக் கேட்பதுதான்!

www.thetruthintamil.com

பிள்ளை பெற்றுக் குடும்பம் பேணும்,

பிறப்பின் நோக்கம் உணராமல்,

தள்ளி வைத்துத் தன்னைக் கோணும்,

தவற்றை இறை வெறுக்கிறார்.

வெள்ளை நிறத்து உடையில் காணும்,

வேறெதிர்நூல் கோர்ப்பு போல்,

உள்ளமிணைத்து ஒன்றாய்ப் பூணும்.

ஒழுக, மலாக்கி உரைக்கிறார்!

(மலாக்கி)

May be an image of text

இரண்டு ஆண்டுகள் மட்டும் சொன்ன

இறைவாக்கார் பெயர் சக்கரையா.

திரண்டு வந்து, கோவிலைக் கட்டி,

திருந்தச் சொன்னார் அக்கரையா.

முரண்டு பிடித்தால் வருவது என்ன?

மேலும் துயர்தான், போக்கலையா?

உருண்ட உலகை மீட்கும் மெசியா,

உடனடி வருவார் நோக்கலையா?

(சக்கரியா)

No photo description available.

அழிக்கப்பட்ட கோயிலை நினைத்து,

அழாதீர் என்கிற ஆண்டவரால்,

விழிக்கச் செய்கிற தூதன் வந்தார்;

வெறொன்றெழுப்பத் தூண்டுகிறார்.

தெளிக்கப்பட்ட ஆகாய் உரையால்,

தெம்பைப் பெற்று அடியவர்கள்,

எழுப்புதலோடு பணியை முடித்தார்.

எளிய கோயிலில் வேண்டுகிறார்!

(ஆகாய்)

May be an image of text

பத்து ஏழு ஆண்டுகள் காலம்,

பாபிலோனின் அடிமையாவீர்.

பித்து நீங்க தெய்வம் காண்பீர்;

பேரருளாலே விடுதலையாவீர்.

தத்துவத்தால் கோரேசு வந்தார்;

தளையறுத்து விடுதலையீந்தார்.

மெத்த அறிவைத் தேடும் நீவீர்,

மேதிய பெர்சிய வரலாறறிவீர்!

(ஏசாயா 44:26-45:1-6 & எசுரா 1-4)

No photo description available.