2025 -ஆம் ஆண்டு வாழ்த்து!
தோண்டும் மனிதர் தொடர்ந்தாலும்,
தொடக்க நாளை அடையவில்லை.
ஆண்டுகள் ஆயிரம் கடந்தாலும்,
மாண்டவர் எச்சமே தூக்கினோம்;
மனித அறிவில் விடியலில்லை.
வேண்டியே இறையை நோக்குவோம்;
விண்வாழ்வுறத் தடையுமில்லை!
-கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
மெசையா என்கிற மீட்பருளாளர்,
மேதினி ஆள வருவாரா?
அசையா அரசை அவரும் அமைத்து,
இசைவாயெழுதிய இறைப்பேரரசை,
எந்நாட்டவரும் பெறுவாரா?
தசையாய் நாமும் உயிருள் இணைய,
தாமதியாயிறை வருவாரே!
-கெர்சோம் செல்லையா.
இப்படி இவர்கள் எழுதிய நூற்கள்,
இசரயெல் என்று இருந்தாலும்,
ஒப்பிட இயலா இறையின் திட்டம்,
உலகம் முழுதும் மீட்பதுதான்.
அப்படி மீட்க வருபவர் குறித்து,
அறிவிக்கும் முன் வாக்குகளில்,
தப்பிதமென்று ஒன்றும் இல்லை;
தரணி மீளக் கேட்பதுதான்!
www.thetruthintamil.com