அன்பைப் பகிர்வதே வாழ்க்கை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:1-2.
1 பஸ்காபண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, அவர் பயிர்வழியே நடந்து போகையில், அவருடைய சீஷர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித்தின்றார்கள்.
2 பரிசேயரில் சிலர் அவர்களை நோக்கி: ஓய்வுநாளில் செய்யத்தகாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
சட்டம் போட்டுச் சடங்குகள் செய்வார்;
சாகா வழியெனச் சாக்குரைப்பார்.
திட்டம் போட்டுத் தீமையும் செய்வார்;
தெய்வ விருப்பெனப் போக்குரைப்பார்.
முட்டாட்தனத்தைச் சட்டம் ஆக்க,
மும்மை தெய்வம் மனிதனில்லை.
கிட்டும் அன்பைப் பகிர்வது வாழ்க்கை;
கேளாவிட்டால், இனிமையில்லை!
ஆமென்.
![Image may contain: text](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/45017712_2064286876935437_3096498019701358592_n.jpg?_nc_cat=101&_nc_eui2=AeHWBxxsjw34kQG8Rs4TfYaFBVWezuNl1vKWwz9Z9SzAK5OMlUiEe-bqjod-hMDrX0ouHHd6OoFUi-r2Fq3bXNhCKna8nVf-Sezm38LIpE5pvQ&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=55598ed29f6c3cc98f1075f034b5ca89&oe=5C4E297B)