வாக்களிக்க வாருங்கள்!

வாருங்கள், வாக்காலே வாழ்வமைப்போம்!

கோடம்பாக்க ஆட்சிகட்கு முடிவு எப்போது?
கேடுகெட்ட தமிழருக்கும் விடிவு எப்போது?
ஆடு மாடு என்றலையும் கூட்டம் இப்போது,
ஓடு போன்று தேயுமுன்னே, காட்டும் தப்பாது!
-கெர்சோம் செல்லையா.

நற்செய்தி மாலை's photo.

தேர்தலும் நம் தேர்வும்!

திருமறையின்படி நாம் தேர்ந்தெடுக்கும் நமது ஆட்சியாளர்கள் அல்லது தலைவர்கள் எப்படி இருக்கவேண்டும்?

இறைவாக்கினன் தேர்தலும் நம் தேர்வும்!மோசேயால், கி.மு. 1410 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட உபாகமம் 17:14-20 – ஐ வாசித்து, நாமும் நம்மை ஆள, நமது ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வோம்.
1. நாம் தேர்ந்தெடுக்கும் நமது ஆட்சியாளர்கள், நல்லிறைவனால் தேர்வு பெறுபவர்கள்தானா என்று முதற்கண் எண்ணிப் பார்ப்போம். (18:15).
2. நம்மை ஆள வருபவர் நம் நாட்டைச் சார்ந்தவர்தானா? அயலவரைத் தேர்வு செய்யக் கூடாது என்று ஆண்டவரின் வாக்கு தெளிவாய் உரைக்கிறது. (18:15).
3. குற்றப் பின்னணியில் உள்ளவர்களைச் சேர்க்காதவர்கள், (அந்த நாள் கணக்கின்படி சண்டைக் குதிரைகள்.18:16), வேறு மனைவியரை-வேறு கணவரைத் தேடாதவர்கள் (18:17), மிகுதியாய்ச் சொத்து சேர்க்காதவர்கள்- அதாவது ஊழல் புரியாதவர்கள் (18:17) என்று பார்த்துத் தேர்வு செய்ய வேண்டும்.
4. நற்பண்புடன் வாழ நாள்தோறும் இறைவாக்கை வாசிப்பவராய், நமது தலைவர் இருக்கவேண்டும்(17:18-20).

இப்படிப்பட்டவர்கள் தேர்தலில் நிற்கவும், தேர்வுபெறவும், இறைவேண்டல் ஏறெடுப்போம்!
-கெர்சோம் செல்லையா.


Click here to Reply, Reply to all or Forw

சிறை பிடிப்போம்!

மற்றவரும் மனிதரென
மதிக்கும் நல்லறிவை,
கற்றவராய் புகட்டாது,
காலங்களை உடைத்தோம்.
பெற்றவராய் இனி திருந்தி,
பிள்ளைபோல் நடப்போம்.
சுற்றியுள்ள சிறைகளிலே
சாதிகளை அடைப்போம்!
-கெர்சோம் செல்லையா.

மற்றவரும் மனிதர்களே!

மற்றவரும் மனிதரென
மதிக்கும் நல்லறிவை,
கற்றவராய் புகட்டாது,
காலங்களை உடைத்தோம்.
பெற்றவராய் இனி திருந்தி,
பிள்ளைபோல் நடப்போம்.
சுற்றியுள்ள சிறைகளிலே
சாதிகளை அடைப்போம்!
-கெர்சோம் செல்லையா.

படைத்தவர் தெளிவு தருகின்றார்!

படைத்தவர் தெளிவு தருகின்றார்!
நற்செய்தி மாலை: மாற்கு 6:48-49.
“அப்போது எதிர்க் காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை. அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, ‘ அது பேய் ‘ என்று எண்ணி அவர்கள் அலறினார்கள்.”
நற்செய்தி மலர்:
கடல் மேல் நடந்து காத்திட விரைந்த
கடவுளின் மகனையே பேய் என்றார்!
உடல் பொருள் ஆவி ஒடுக்கி உழைத்த
ஊழியர்கூட இதைச் சொன்னார்!
இடம் பொருள் ஏவல் தெரியாததனால்
இப்படி மனிதர் தவறுகின்றார்.
படம் போல் பார்க்கும் அறிவைக் கேட்போம்;
படைத்தவர் தெளிவைத் தருகின்றார்!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

பதற்றத்தில் பேசவேண்டாம்!

பதற்றத்தில் பேசாதீர்!

நற்செய்தி மாலை: மாற்கு 6:48-49.

“அப்போது எதிர்க் காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை. அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, ‘ அது பேய் ‘ என்று எண்ணி அவர்கள் அலறினார்கள்.”
நற்செய்தி மலர்:
ஆழ் கடலில் நடந்திடவும்,
ஆண்டவர்க்குத்  தெரியும்.
அறியாத மானிடர்க்கோ,
அதுமாறிப் புரியும்.
பாழ் உலகில் அதிசயங்கள் 
படைத்தவரின் மிச்சம்.
பதற்றத்தில் பேசாதீர்;
பரவி விடும் அச்சம்!
ஆமென்.

தனிமை வேண்டல்!

தனித்தும் கேட்போம்!
நற்செய்தி மாலை : மாற்கு: 6:45-47.
“இயேசு கூட்டத்தினரை அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது தம் சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரையிலுள்ள பெத்சாய்தாவுக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார். அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார். பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. ஆனால் அவர் தனியே கரையில் இருந்தார்.”
நற்செய்தி மலர்:
இருவர் மூவர் இணைந்து வேண்ட,
இறைவன் அங்கே வந்திடுவார்.
ஒருவர் தனித்து வேண்டினாலும்,
உள்ளில் அமர்ந்து தந்திடுவார்.
திருடர் வருதல் போல இயேசு
தெரியா நேரம் இறங்கிடுவார்.
அருளர் அணியில் நாமும் சேர,
அவரைக் கேட்போம், இரங்கிடுவார்!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

அனைவருக்குணவு நீர் தாரும்!

 

அனைவருக்குணவு நீர் தாரும்!
நற்செய்தி மாலை: மாற்கு 6:41-44
“அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பாhத்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார். அவ்வாறே அந்த இரு மீன்களையும் எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார். அனைவரும் வயிறார உண்டனர். பின் எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். அப்பம் உண்ட ஆண்களின் தொகை ஐயாயிரம்.”
நற்செய்தி மலர்:
மண்ணாகிப் போன திட்டங்களாலே,
மனிதர் பட்டினி கிடக்கின்றார்.
உண்ணாது அலையும் ஏழையருக்கு,
உதவார் கதவை அடைக்கின்றார்.
எண்ணாது இவரை இப்படிவிட்டால்,
இந்தியா எப்படி முன்னேறும்?
அண்ணாந்து பார்த்து போற்றிய மகனே,
அனைவருக்குணவு நீர் தாரும்!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

வேண்டாம் வெளிநாட்டு காசு!


வேண்டாம் வெளிநாட்டு உதவி!
நற்செய்தி மாலை: 6:38-40.
“அப்பொழுது அவர், ‘ உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள் ‘ என்று கூற, அவர்களும் பார்த்து விட்டு, ‘ ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன ‘ என்றார்கள். அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி சீடர்களைப் பணித்தார். மக்கள் நூறு பேராகவும், ஐம்பது பேராகவும் வரிசை வரிசையாய் அமர்ந்தனர்.”

நற்செய்தி மலர்:
பாருங்கள் நண்பர்களே.
பரனேசு சொல்வதையே!
சேருங்கள் நம் பொருளே;
சிறப்புடன் செய்வதற்கே.
வாருங்கள் மறுப்பதற்கே;
வெளிநாட்டு காசுகளே.
கூறுங்கள் உறுதியிலே;
கிறித்துவின் தன்னிறைவே!
ஆமென்.

காசு காசு….

காசு காசு….
 
நற்செய்தி மாலை: மாற்கு 6:35-37.
“இதற்குள் நெடுநேரமாகிவிடவே, சீடர் அவரிடம் வந்து, ‘ இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, ஏற்கெனவே நெடுநேரம் ஆகிவிட்டது. சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக்கொள்ளுமாறு நீர் மக்களை அனுப்பிவிடும் ‘ என்றனர். அவர் அவர்களிடம், ‘நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்’ என்று பதிலளித்தார். அவர்கள், ‘நாங்கள் போய் இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கி இவர்களுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறீரா?’ என்று கேட்டார்கள்.”
நற்செய்தி மலர்:
காசு கேட்டு, வாங்கி எடுத்துக்
கணக்கின்றிச் செலவிட, கட்டளையோ?
தூசு என்று, எளியரை நினைத்துத்
துட்டால் வாங்கிட, முட்டாளோ?
ஆசு தேடியும் கிடைக்கா இறையின்
அற்புதச் செயல்தான் ஊழியமே!
ஏசுபவர்கள் இன்றும் காண்பார்;
இயேசுதான் நம் வழியுமே!
ஆமென்.
நற்செய்தி மாலை's photo.