இறைவனின் மகனைப் பெற்றிடும் பேறு!

இறைவனின் மகனைப் பெற்றிடும் பேறு!
இறைவாக்கு: லூக்கா 1;26-28.
26 ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்,
27 தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்.
28 அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.

இறைவாழ்வு:
மறைவழி வாழும் மாண்பு கொண்டோர்,
மாநிலத்தில் இன்று அரிதாகும்.
இறைவனும் இவரில் மகனாய்ப் பிறத்தல்,
எல்லா அரிதிலும் பெரிதாகும்.
குறையுள்ள நம்மில் நிறைவாய் வாழ்ந்து,
கொடுத்து வைத்தவர் மரியாகும்.
அறைந்திடும் ஆணியாகவே சொல்வேன்,
ஆண்டவர் தேர்வே சரியாகும்!
ஆமென்.

Image may contain: one or more people, wedding, outdoor and nature

எந்தனின் காட்டில் எருமை!

முந்திரித் தோட்டம் அழிக்கும் விலங்கை
முதற்கண் பிடிப்பார் ஆர்வலர்.
எந்தனின் காட்டில் எருமை பிடித்தால்,
என்னைப் பிடிப்பார் காவலர்.
தந்திரமாகப் பிடித்து விற்பார்,
தவற்றைச் செய்யும் வேட்டையர்.
வந்தவை யாவும் நன்மை என்று,
வாழ்த்திச் செல்வார், நாட்டையர்!
-கெர்சோம் செல்லையா.

Image may contain: tree, outdoor and nature

ஐயமுற்றவர் மனைவி எனினும்!

ஐயமுற்றவர் மனைவி எனினும்!
இறைவாக்கு: லூக்கா 1:24-25.

24 அந்நாட்களுக்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியாகி: ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து,
25 எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி, ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தாள்.

இறைவாழ்வு:

ஐயமுற்றவர் மனைவி என்றாலும்,
ஆண்டவர் அருள்தர மறுக்கவில்லை.
கையறு நிலையில் விழுபவர் எனினும்,
கனிந்து தாங்கவும் மறக்கவில்லை.
மெய்மையில்லாத ஊழியர் கண்டும்,
மேன்மை அளிக்கவும் குறைக்கவில்லை!
பொய்யென்று நானும் நம்பாதிருந்தேன்.
புனிதர் எனையும் வெறுக்கவில்லை!
ஆமென்.

Image may contain: text

நம்பிக்கையுள்ளோர் வாய் மூடார்!

நம்பிக்கையுள்ளோர் வாய் மூடார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:21-23.

21 ஜனங்கள் சகரியாவுக்குக் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.
22 அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகை காட்டி ஊமையாயிருந்தான்.

கிறித்துவில் வாழ்வு:
நம்பிக்கையுள்ளோர் வாய் மூடார்;
நற்செய்தியன்றி அவர் பாடார்.
கும்பிடும் கையில் பொருள் நாடார்;
கோடி கொடுப்பினும் பின் ஓடார்.
வம்பும் வாதும் இனி கேளார்;
வாய்மையற்றோர் முன் தாழார்.
அம்புகள்வரினும் அவர் மாளார்;
அவரை வெறுப்பவர்தான் வாழார்!
ஆமென்.

Image may contain: text
Gershom Chelliah

எப்படி நடக்கும்?

எப்படி நடக்கும்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:18-20.
18 அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்.
19 தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;
20 இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
எப்படி நடக்கக் கூடும் என்று,
இறைவாக்கினை நாம் புறக்கணித்தோம்.
இப்படி எத்தனை பயன்களிழந்தோம்;
எண்ணிப் பார்த்து அரவணைப்போம்.
தப்பிதம் எதுவும் பற்றினில் வேண்டாம்;
தந்தை இறையை நம்பிடுவோம்.
அப்படி வரினும், அவைகள் ஒழியும்;
ஆண்டவர் வழியில் கும்பிடுவோம்!
ஆமென்.

Image may contain: cloud, text and nature
 

திருப்பும் ஆண்டவரே!

திருப்பும் ஆண்டவரே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1 :16 -17

16 அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
17 பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:
தெய்வத்தின் ஆவி திருத்தாவிட்டால்,
தெளிவற்றவர்கள் திருந்தார்கள்.
பொய்மையின் ஆவி பொய்க்காவிட்டால்,
புனிதருரைப்பினும் வருந்தார்கள்.
மெய்யெது, பொய்யெது அறியா மக்கள்;
மேன்மை எப்படி பெறுவார்கள்?
ஐயனின் மீட்பு அரிதென்றுணர்ந்தேன்;
ஆவியரால்தான் வருவார்கள்!
ஆமென்.

Image may contain: outdoor
LikeShow More Reactions

Comment

Comments
Gershom Chelliah
Write a comment…

ஆவியில் நிறைந்தவர்!

No automatic alt text available.
ஆவியில் நிறைந்தவர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:15.
15 அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.”
 
கிறித்துவில் வாழ்வு:
ஊனுடல் உள்ளோர் இறைமுன் நின்று,
உயர்ந்தோர் தாமென உரைப்பாரோ?
வானுயர் நேர்மை கொண்டோர் என்று,
வாயினில் வாக்கும் நிறைப்பாரோ?
மானுடர் எவரும் கூறிடமாட்டார்.
மனிதர் தகுதியில் குறைந்திட்டார்.
நாணிடும் நம்முன் யோவான் நின்றார்;
நல்லாவியரால் நிறைந்திட்டார்!
ஆமென்.

மகிழ்வீதலே நமது பயன்!

மகிழ்வீதலே நமது பயன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:11-14.

11 அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.
12 சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.
13 தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.
14 உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

பிறந்தபோது நம்மில் மகிழ்ந்த,
பெற்றோர் இன்று அழுவது ஏன்?
திறந்த வெளியில் திரியும் இவர்கள்,
தேடும் இல்லம் வளர்வது ஏன்?
இறந்த காலத் தவற்றை முடித்து,
இன்பம் வழங்க மறுப்பது ஏன்?
மறந்த எவரும் மகிழ்ந்ததில்லை;
மகிழ்வீதலே, நமது பயன்!
ஆமென்.

No automatic alt text available.

விண்வழி அறிவீர்!

விண்வழி அறிவீர்!

வல்லவர் வகுப்பது வாய்மையாயின்,
வாழ்க்கையும் உண்மையில் பொய்மையே.
நல்லவராக நடப்பவர் குறைவார்;
நடிப்பவர் உயர்வார் மெய்மையே.
சொல்பவர் செய்தவராயெனப் பார்த்துச்
சொல்லை ஆய்தல் தன்மையே.
வெல்பவர் உரைக்கும் வேதம் வேண்டாம்;
விண்வழி அறிவீர் நன்மையே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 11 people, people standing and text

பார்ப்போம் இறையை நன்றேயாம்!

பார்ப்போம் இறையை நன்றேயாம்!
கிறித்துவின் வாக்கு:லூக்கா 1 :10
“தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.”
கிறித்துவில் வாழ்வு:
விழுதுகள் வேறாய்த் தெரிந்தாலும்,
வேர்மேல் மரமோ ஒன்றேயாம்.
தொழுதிடும் முறைகள் விரிந்தாலும்,
தொழப்படும் இறையோ ஒன்றேயாம்.
கழுவிடும் சடங்கென எரிந்தாலும்,
கடவுளின் வழியோ ஒன்றேயாம்.
பழுதுள்ளவராய்த் திரிந்தாலும்,
பார்ப்போம் இறையை நன்றேயாம்!
ஆமென்.

Image may contain: tree, plant, outdoor and nature