யாருக்கு மதிப்பு?

அடியரா? ஆண்டவரா?

நற்செய்தி: யோவான் 4:41-42. 41.

அப்பொழுது அவருடைய உபதேசத்தினிமித்தம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து,42. அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.

நல்வழி:

வாக்குரைக்கும் அடியருக்கு,

வழங்குகின்ற மதிப்பை,

ஆக்குகின்ற இறைவனுக்கு,

அளிப்பாயா மனிதா?

தூக்கியுன்னை உயர்த்துகின்ற,

தூயவரின் கரத்தை,

போக்குரைத்து உதறுவது,

போதாதோ? இனி வா!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

பிரிவினை வேண்டாம்!

மனிதம் பிரிக்கும் மடையோரே!
நற்செய்தி: யோவான் 4:39-40.

39. நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

40. சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டுநாள் அங்கே தங்கினார்.

நல்வழி:

இரு பத்து நூறு ஆண்டுகள் முன்பு,

யூதரில் இருந்த  இனவெறியின்,

மறு பதிப்பென்று சாதியை வைத்து,

மனிதம் பிரிக்கும் மடையோரே,

ஒரு குலமாக இணைவீர் என்று,

இயேசு தருகிற  இறையன்பின்,

திருவடி கண்டு, திருந்துவோர்தான், 


தெய்வப் பண்பு உடையோரே! 


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

நட்டவன் ஒருவன்!

நட்டவன் ஒருவன்!


நற்செய்தி : யோவான் 4:36-38.

நல்வாழ்வு:


நட்டவன் ஒருவன் நனைத்தவன் ஒருவன்.

நற்பயன் தருவதோ நம்மிறைவன்.

இட்டவன் ஒருவன் எடுத்தவன் ஒருவன்,

எனினும் தருவான் நல்லிறைவன்.

விட்டவன் ஒருவன், விரும்பின் பெறுவன்,

விடுதலை ஈவதோ நம்மிறைவன்.

கெட்டவன் திருந்தின், கேட்பது பெறுவன்; 

கிறித்து அன்பே நல்லிறைவன்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

அறுவடை!

அறுவடை மிகுதி!

நற்செய்தி: யோவான் 4:35.

35. அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நல்வழி:

நான்கு திங்கள் அறுக்காது,

நல்விளைச்சல் விடுவாரோ?

தூங்குபவரை ஒறுக்காது,

தொழிலிழந்து கெடுவாரோ?

தேங்கு மந்தம் பொறுக்காது,

திருமறையை எடுப்போமே.

ஏங்குகின்றார் இறைமகனார்;

இன்தொண்டிற்கு நடப்போமே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

உணவாகிய இறைவிருப்பு!

இறைவிருப்பென்னும் உணவு!
நற்செய்தி: யோவான் 4:31-34.

நல்வழி:

உண்ணும் உணவு எவ்வாறுண்டு?
ஒவ்வோர் ஊரில் வெவ்வேறுண்டு.

எண்ணும் அறிவு எதுபோலுண்டு?

எளியோர் உணவு, அதுபோலுண்டு. 

விண்ணின் முடிவு எங்கனமுண்டு?


விருந்து சுவையின் மங்கலமுண்டு!

தின்னும் மக்கள் எங்கேயுண்டு?


தெய்வ அரசில் இங்கேயுண்டு!


ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

அறிவித்தல்!

அறிவித்தல்! 
நற்செய்தி: யோவான் 4:28-30.

நல்வழி: 


அறிந்து கொண்ட அப்பெண்ணும்,   

அறிவிப்பதற்கு ஓடுகிறாள். 

தெரிந்து மறந்த அவளூரும், 

தெய்வம் காண நாடுகிறாள். 

பரிந்து பேசும் இறைமகனும்,


பழிப்போர் மீளத் தேடுகிறார்.

புரிந்து நாமும் அறிவிப்போம்;


புனிதர் அன்பில் பாடுகிறார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஏன் எழுதுகிறேன்?

ஏன் எழுதுகிறேன்?

எண்ணி விதைப்பது பலவாகும்.
எழுத்தில் காய்ப்பது சிலவாகும்.
பண்ணும் பாடல் கனியாகும்;

பகிர்நதால் மட்டும், இனிதாகும்.

கண்ணைத் திறப்பது வாக்காகும்;

கடவுளைக் காட்டும் நோக்காகும்.
விண்ணின் விருப்பே சீராகும்;
விருந்தாய் ஏற்போம், பேறாகும்!

-கெர்சோம் செல்லையா.

Duthie Girls’ school

DUTHIE GIRLS HR.SEC School-NAGERCOIL – Tamil Nadu – was established by the Christian Missionaries in 1819. It was the first school for girls in southern India. If our historians can write truthfully, it may be the first or the second one even in India! Nevertheless, this is our failure to identify the right thing in the right time! We have failed to think about the services rendered by the Christian Missionaries to us.We have failed to bring out our gratitude, that remains silently within us.Today is Social Justice Day. Let us remember those noble souls who brought us here to see the wisdom of creation and taught us to proclaim that, ALL ARE EQUAL IN THE EYES OF GOD!-Gershom Chelliah.

பெண்ணிடம் பேசுதல்!

பெண்ணிடம் பேசுதல்!

நற்செய்தி: யோவான் 4:27.   

நல்வழி:


பெண்ணை மதியா அப்பழ நாளில்,

பேசிக் கொள்ளவும் தடையுண்டு.

அண்மை வந்த அப்பெண்ணிடத்தில்,


அவலங்களுக்கும் கடையுண்டு.

எண்ணம் பேச்சு எதுவென்றாலும்,

இயேசு செயலில் விடையுண்டு. 

இன்னாள் பிறரை இதுபோல் ஏற்பின்,

எங்கும் அமைதிப் படையுண்டு! 

ஆமென்.


-கெர்சோம் செல்லையா.