குற்றமற்றோருக்குத் தண்டனையா?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:13-16.
13 பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்து,
14 அவர்களை நோக்கி: ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.
15 உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே.
16 ஆனபடியால் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
குற்றம் இல்லை என்றறிந்தும்,
கொடுத்தார் தண்டனை இயேசுவிற்கு;
கற்றும் கேட்டும் தெரிந்திருந்தும்,
கடமை தவறுதல் ஏன், எதற்கு?
பற்றும் பாவம் பரிசு தரும்;
பாங்காய்க் கடமை செய்யார்க்கு.
அற்றுப் போகும் நாளும் வரும்;
அந்தோ போகிறார், அழிவதற்கு!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.