எது சிறந்தது?

எது சிறந்தது?

உண்டு நிரப்பி, உரைகள் பரப்பி ,

ஊழியம் செய்தோம் என்பவரே,
தொண்டு புரிதலே இறைப்பணியாகும்;
தூய வாழ்வைத் தெரிவீரே.
கண்டுகொள்ள நீர் இயேசுவைப் பாரும்;
காலைக் கழுவி பணி செய்தார்.
முண்டு தூக்கி நீர் முழங்கால் காட்டும்
முன்பு இதனைப் புரிவீரே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.