நெஞ்சின் நேர்மை

நற்செய்தி மாலை: மாற்கு 6:18-20.
“ஏனெனில் யோவான் ஏரோதிடம், ‘ உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல ‘ எனச் சொல்லிவந்தார். அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை. ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்.”
நற்செய்தி மலர்:
நெஞ்சின் நேர்மை நிமிரச் செய்யும்;
நெறியற்றோர் முன் உயரச் செய்யும்.
மிஞ்சும் தீதை மிரளச் செய்யும்;
மீட்கும் வழியை ஒளிரச் செய்யும்.
அஞ்ச வேண்டாம், தீமை கண்டு;
அதனை அழிக்க ஆண்டவருண்டு.
தஞ்சம் கேட்போம், தாழ்மை கொண்டு;
தருவார் இயேசு, மேன்மையுண்டு!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

யார் பெரியவர்?

யார் பெரியவர்?
ஒன்றிற்கும் இரண்டிற்கும் போனபின்பு,
உடலை நாமே கழுவுகிறோம்.
என்றிருந்தாலும் நம் அழுக்கை
எங்கோ வீசி நழுவுகிறோம்.
முன்னின்று தூய்மை செய்பவரை
முறைத்தும் குறைத்தும் நோக்குகிறோம்.
நன்றியிலாத நம்மைத்தான்,
நாட்டில் பெரியவர் ஆக்குகிறோம்!
-கெர்சோம் செல்லையா

நற்செய்தி மாலை's photo.

பெண்டிர் பின்னர் போவோர்…

 

 பெண்டிர் பின்னர் போவோர்…

நற்செய்தி மாலை: மாற்கு 6:14-17
“இயேசுவின் பெயர் எங்கும் பரவியது. ஏரோது அரசனும் அவரைப் பற்றிக் கேள்வியுற்றான். சிலர், ‘ இறந்த திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார்; இதனால் தான் இந்த வல்ல செயல்கள் இவரால் ஆற்றப்படுகின்றன ‘ என்றனர். வேறு சிலர், ‘ இவர் எலியா ‘ என்றனர். மற்றும் சிலர், ‘ ஏனைய இறைவாக்கினரைப்போல் இவரும் ஓர் இறைவாக்கினரே ‘ என்றனர். இதைக் கேட்ட ஏரோது, ‘ இவர் யோவானே. அவர் தலையை நான் வெட்டச் செய்தேன். ஆனால் அவர் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார் ‘ என்று கூறினான். இதே ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆளனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான்.”

நற்செய்தி மலர்:
பெண்டிர் பின்னர் போவோர் வாழ்வு
பின்னல் அவிழ்ந்த சடைபோல் ஆகும்.
எண்ணம் யாவும் தவறாய்ப் போகும்;
ஏற்படும் இழப்பும் வலியாய் நோகும்.
மண்ணாய்ப் போன மன்னர் பலரும்
மாண்பை இழந்தது பெண்ணாலாகும்.
கண்ணால் கூட கருத்தை இழக்கா
கடவுளைப் பார்ப்போம், நன்மையாகும்!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.