பழிச் சொற்கள்!

பழிச்சொற்கள்!
நற்செய்தி: யோவான் 8:48-49. 

நல்வழி:


தொண்டு வாழ்வின் தூய்மை புரியார்,

தொண்டின் ஊற்றைத் தூற்றிடுவார். 

உண்டு கொழுப்பதை உயர்வாய் நினைப்பார்,

உண்மையைப் பொய்யாய் மாற்றிடுவார். 

கண்டு கொள்ளாதவராகத் தெரியும்,

கடவுள் நடுவாராய் வீற்றிடுவார். 

வண்டு பறப்பது போல் பழி ஓடும்;

வான் புகழாரமும் சாற்றிடுவார்! 

ஆமென். 


-கெர்சோம் செல்லையா.