உணவாம் ஆண்டவர்!

இறை மொழி : யோவான் 21:9-11.

9. அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் கண்டார்கள்.

10. இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார்.

11. சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.

இறை வழி:

உழைத்துக் கிடைக்கும் உணவும் உண்டு.

உண்ண உண்ண, இன்பம்.

பிழைத்துக் கிடைக்கும் உணவும் உண்டு;

பின்னால் வருமே துன்பம்.

அழைத்தவர் தருகிற உணவும் உண்டு.

அதுதான் மா பெரும் இன்பம்.

தழைக்கச் செய்யும் இறையும் உண்டு;

தரார் நமக்குத் துன்பம்!

ஆமென்.

May be an image of table, banner, tablecloth and text that says 'The Lord's Table'

உணவு தரும் ஆயர்!

உணவு தரும் ஆயர்!

இறைமொழி: 21:7-8.

7. ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான்.

8. மற்றச் சீஷர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்தில் இருந்தபடியினால் படவிலிருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டுவந்தார்கள்.

இறை வழி:

வசிக்க இடமின்றி வாழ்ந்தவர் அன்று,

வழி தவறியவரைத் தேடினார்.

புசிக்க ஏதேனும் உண்டோ வென்று,

புரியா அடியரையும் நாடினார்.

ருசிக்க ஒன்றும் இல்லார் கண்டு,

தெய்வமும் பசியிலே வாடினார்.

கசக்குமுண்மை, கண்டவர் உண்டு;

காய்ந்தவர் உண்டிடக் கூடினார்!

ஆமென்.

May be an image of 1 person

இயேசு சொல்ல ஆகும்!

இயேசு சொன்னார் கிடைத்தது!

இறை மொழி: யோவான் 21:4-6.

4. விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள்.

5. இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள்.

6. அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்.

இறை வழி:

ஏசு இல்லா திழந்தது.

ஏசு சொல்ல வந்தது.

பேசு பொருள் ஆனது;

பேத மையும் போனது.

மாசு ஏக்கம் பெரியது.

மனக் கலக்கம் புரியுது.

நேச ருள்ளே செல்வது,

நேர்மையாக வாழ்வது!

ஆமென்.

May be an image of 1 person, fishing and text that says 'John 21:3-6 Cast Your Net On The Right Side'

வேறு வேலை தேடி!

வேறு விருப்பம்!

இறை மொழி: யோவான் 21: 1-3.

1. இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விவரமாவது:

2. சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும், செபெதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது,

3. சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.

இறை வழி:

வேறு விருப்பு வெகுண்டு எழும்ப,

விண்ணின் விருப்பு பணிகிறது.

ஆறு அடியர் அது போல் தழும்ப,

ஆண்டவர் நெஞ்சும் குனிகிறது.

நூறு வழிகள் நம் முன் மின்ன,

நேர்வழி மீட்புள் நுழைகிறது.

கூறு நண்பா,உன் விருப்பென்ன?

கிறித்தவ வழி விழைகிறது!

ஆமென்.

May be an image of 1 person

யோவான் 20:30-31.

சொன்னது கொஞ்சம்!

இறை மொழி: யோவான் 20:30-31.

30. இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்.

31. இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.

இறை வழி:

சொல்லார் மிஞ்சும் நாட்டில்

சொன்னார் கொஞ்சம் ஏட்டில்.

நல்லார் நம்பியணைப்பார்.

நன்மைக்கிறை இணைப்பார்.

வல்லார் வகுத்தது அல்ல;

வாகைச் சூட்டிச் சொல்ல.

எல்லாம் மீட்பதே திட்டம்;

அன்புதான் இறைச்சட்டம்!

ஆமென்.

May be an image of 1 person and text that says 'Characteristics of a Genuine Belief John 20:30-31 "...these have been written so that you may believe..."'

நல் நம்பிக்கை!

நம்பிக்கை!

இறை மொழி: யோவான் 20:29.

29. அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.

இறை வழி:

பண்டு தொடங்கிப் பார்க்கிறார் மனிதர்;

பார்க்கும் முன்னே ஏற்கிறார் புனிதர்.

கொண்டு தருவதை வாங்குவார் மனிதர்;

கொள்ளும் முன்னே தாங்குவார் புனிதர்.

உண்டு களித்துப் புகழ்கிறார் மனிதர்;

ஊருக்கிறைத்துத் திகழ்கிறார் புனிதர்.

கண்டு நம்பாதும் ஓட்டுவார் மனிதர்;

காணாயிறையைக் காட்டினால் புனிதர்!

ஆமென்.

May be an image of text that says '"Blessed are those who have not seen and yet have believed." John 20:29, NIV'

என் ஆண்டவரே, என் கடவுளே!

எட்டு நாட்களுக்குப் பின்

இறை மொழி: யோவான் 20:26-28.

26. மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

27. பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.

28. தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.

இறை வழி:

எட்டு நாள் வரை விட்டுக் கொடுத்து,

இறை மகன் காட்சி கொடுக்கிறார்.

கெட்டு, இழந்து போதல் தடுத்து

கிறித்து அடியரை அடுக்கிறார்.

மட்டு தொடாத மகிழ்ச்சியில் அடியர்

மயக்கம் தெளியக் களிக்கிறார்.

கட்டு படுத்தாப் பற்றில் துடியர்,

கடவுளே என்று விளிக்கிறார்!

ஆமென்.

May be an image of 3 people and text that says 'Thomas answered and said to Him Lord and my God John 20:28 Knowing-Jesus.com'

நம்பு!

நம்பாமை!

இறை மொழி: யோவான் 20:24-25.

24. இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை.

25. மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.

இறை வழி:

தும்பை பூக்கள் வெண்மை என்றால்,

தூய நெஞ்சே நம்பு.

வம்பை வளர்த்தல் தீது என்றால்,

வாதிடாமல் நம்பு.

அம்பும் வில்லும் வேண்டாமென்றால்,

அறிவுலகே நம்பு.

நம்பிக்கைதான் வாழ்வு என்றால்,

நண்பா நீயும் நம்பு!

ஆமென்.

No photo description available.

பொறுத்திடும் திருப்பணி!

பொறுத்திடும் திருப்பணி!

இறை மொழி: யோவான் 20:21-23

21. இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,

22. அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;

23. எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.

இறை வழி:

வெறுத்திடும் மனிதர் பெருத்திடும் போது

விண் மகன் ஊழியம் வழங்குகிறார்.

பொறுத்திடும் பண்பை வளர்த்திடும் தூது,

புனித ஆவியால் வழங்குகிறார்.

மறுத்திடும் பேச்சு சொல்பவர் வாது,

மறையும்படிக்கே வழங்குகிறார்.

திருந்திடுவோமெனில் தீமை வெல்லாது.

தெய்வப் பண்பே வழங்குகிறார்!

ஆமென்.

May be an image of 1 person and text that says '"Without forgiveness there is no future."'

அமைதி!

அமைதி!

இறை மொழி: யோவான் 20:19-20.

19. வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

20. அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.

இறை வழி:

அடையாத பொருட்கள் இங்கிருப்பின்,

அவற்றில் ஒன்று அமைதியாம்.

உடையாத நெஞ்சம் எங்குமில்லை;

ஊர் தராது நிம்மதியாம்.

கிடையாத மனிதர் தேடித்திரிகையில்,

கிறித்து வந்து தருவராம்.

மடையாக ஊற்றும் காயம் பாரும்;

மா அமைதி பெறுவராம்!

ஆமென்.

May be a doodle of text