முடிவாய் வருகிற உயிர்ப்பு!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:17-21.  

கிறித்துவில் வாழ்வு: 
அடியார் என்று பெயர் பெற்றும், 
அறியாமையும் தொடர்கிறது.     
படியார் பாரார்; அது வரைக்கும்,     
பாவப் பண்பும் படர்கிறது.    
துடியாய்த் துடித்து இறந்திருந்தும், 
தூயனுயிர்ப்பும் தெரிகிறது.  
முடிவாய் வருவது உயிர்ப்பாகும்;      
முக்காலமும் புரிகிறது!  
ஆமென். 
-கெர்சோம் செல்லையா.  

நெஞ்சில் காண்போம்!

நெஞ்சில் காண்போம்!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:13-16.  

கிறித்துவில் வாழ்வு:  
நன்றாய் வேண்டல் செய்கின்றோம்;  
நல்லிறை நூலும் கற்கின்றோம்.  
சென்றார் வந்தார் நினையாமல்,  
செய்தியுரைத்தும் நிற்கின்றோம்.
என்றாலும் நாம் குறைகின்றோம்.  
எங்கெல்லாமோ பார்க்கின்றோம்.  
நின்றாள்கின்ற இறைமகனை,  
நெஞ்சில்கண்டு ஆர்ப்பரிப்போம்!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.  

ஓடும் பேதுரு!

கிறித்துவில் வாழ்வு:  

மும்முறை மறுத்த பேதுரு இன்று,  
முதல்வனாய் அறிய ஓடுகின்றார்.  
இம்முறை கேட்பது சரியோயென்று,  
இயேசுவின் உடலைத் தேடுகின்றார். 
செம்மறை காட்டும் சீலைகள் கண்டு.  
சிந்தை நடுங்கவே ஆடுகின்றார்.  
தம்மிடம் இருக்கும் ஐயம் கொண்டு, 
தயக்கமுற்றவர் வாடுகின்றார்!
ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.  

வீண் பேச்சா?

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:8-11.  

கிறித்துவில் வாழ்வு: 
பித்தென எண்ணிப் பிதற்றல் என்றது, 
பிரறல்ல, இயேசுவின் பிள்ளைகளே.
ஒத்துக் கொள்ள அவரை வைத்தது 
உயிர்த்த இயேசுவின் கல்லறையே.  
செத்தவர் உயிர்த்து எழும்பி வருவது, 
செரிக்க இயலா வல்லமையே.  
எத்தனையோ பேர் இதனைக் கண்டு,  
இயேசுவை நம்புதல் நல்லருளே!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.  

நினைவுகூருங்கள்!

நினைவுகூருங்கள்!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:7  

கிறித்துவில் வாழ்வு: 
முன்பே உரைத்த இறைவாக்கு,  
முழுதும் நிகழ்வது நீ கண்டு,    

இன்றே இயேசுவை ஏற்றுக்கொள்;  
இனிய வாழ்வு உனக்குண்டு. 
அன்பே நமக்கு வழியென்று,  
ஆண்டவர் சொல்வது நீ கேட்டு,  
நன்றே உன்னைத் திருத்திக்கொள்.  
நன்மை தரவே இப்பாட்டு!  
-ஆமென். 

-கெர்சோம் செல்லையா.  

இயேசுவின் உயிர்ப்பு!

இயேசுவின் உயிர்ப்பு!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:5-6.  

கிறித்துவில் வாழ்வு:  


இறந்தவர் கிடக்கிற கூட்டத்திலே,  

எழுந்தவர் என்பவர் ஒருவரில்லை.   

பிறந்தவர் முடிக்கிற தோட்டத்திலே, 


பின்னர் நிகழ்வதும் தெரிவதில்லை. 


சிறந்தவர் இயேசு எழுகையிலே, 


சிதறின பழமை எண்ணங்களே. 


திறந்தவர் அவரைத் தொழுகையிலே, 

 
தெரியுது உயிர்ப்பின் வண்ணங்களே! 


ஆமென்.

உடலைத் தேடுகிறோம்!

உடலையே தேடுகிறோம்!  

கிறித்துவின் வாக்கு:  லூக்கா 24:1-4.  

கிறித்துவில் வாழ்வு: 
அன்பர் இயேசுவின் உடல் தேடி,    
அங்கு சென்றனர் அப்பெண்கள். 
இன்பர் உயிர்த்த அறிவின்றி,   
ஏங்கிப் பார்த்தன அவர் கண்கள்.  
துன்ப நாட்களில் நாம்கூட,  
துயரில் பிணமே தேடுகிறோம்.  
நண்பர் இயேசு நம்முள்ளின்  
நல்லுயிர் மறந்து வாடுகிறோம்! 
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.