பன்னிரு ஆண்களை இசரயெல் பெற்றார்,
பாசம் மட்டும் இருவரில் உற்றார்.
சொன்ன கனவால் ஒருவனை இழந்தார்.
சொல் நிறைவேற யோசப் உழன்றார்.
அன்னிய நாட்டில் அடிமை என்றானார்.
இன்னலின் போது பலபேர் கேட்பார்;
இறையோ இரங்கி நம்மை மீட்பார்!
![May be an image of text that says 'BUT WHILE JOSEPH WAS THERE IN THE PRISON, THE LORD WAS WITH HIM. Genesis 39:20b-21a'](https://scontent.fmaa3-3.fna.fbcdn.net/v/t39.30808-6/428636419_7463919760305428_3640839620934833864_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=3635dc&_nc_ohc=jYMtURtDLhYAX9C354j&_nc_ht=scontent.fmaa3-3.fna&oh=00_AfA_MvsyiN9DTAw__oSws-E0WkIhFEihAAalqR9c_xB0Ng&oe=65E38733)
The Truth Will Make You Free
ஆண்டுகள் இருபத்து நான்கு கடந்தும்,
ஆண்டவர் சொன்னது வரவில்லை.
வேண்டிக் கேட்ட பிள்ளைப் பேறும்,
விரும்பும் ஆபிராம் பெறவில்லை.
தாண்டிய நாடுகள் பின்பு கிடந்தும்,
தருகின்ற இறையும் தரவில்லை.
ஏன்டா இப்படி, என்றே சொன்னோம்!
இப் பொறுமையிழத்தல் அறமில்லை!
(தொடக்கநூல் 17)