பன்னிரு ஆண்களை இசரயெல் பெற்றார்,

பாசம் மட்டும் இருவரில் உற்றார்.

சொன்ன கனவால் ஒருவனை இழந்தார்.

சொல் நிறைவேற யோசப் உழன்றார்.

அன்னிய நாட்டில் அடிமை என்றானார்.

ஆயினும் இறையோ உடனுண்டானார்.

இன்னலின் போது பலபேர் கேட்பார்;

இறையோ இரங்கி நம்மை மீட்பார்!

May be an image of text that says 'BUT WHILE JOSEPH WAS THERE IN THE PRISON, THE LORD WAS WITH HIM. Genesis 39:20b-21a'

வாக்கின்படியே வந்தவர் வழியில்,

வரிசையாக இருவர் பிறந்தார்.

நோக்கும் மனிதர் முதல்வர் தெரிவார்.

நொண்டியவரையே இறை தெரிந்தார்.

தீக்குணம் கொண்டு அவர் இருந்தும்,

திருத்தி இசரயெல்லென விளித்தார்.

போக்கிடம் சொந்தம் வேறு பிரிந்தும்,

புதிய நாடும் வாக்களித்தார்.

May be an image of text that says 'GOD'S TO THE NATION OF ISRAEL PROMISES ARE ETERNAL mesabiblestudy.com'

நொந்து பிள்ளை பெற்றிடும் போது

நகைத்த சாறாள் தொண்ணூறு.

எந்த நிலையிலும் இறை பார்க்கின்ற,

ஆபிரகாமோ ஒரு நூறு.

உந்து வலிமை இறை தரும் போது,

உனக்கும் உண்டு பெரும்பேறு.

வந்து பார்த்து நண்பா நம்பு.

வளம் கொடுக்கும், அருள் ஆறு!

(தொடக்கநூல் 21:1-7)

May be an illustration

அழியாப் பற்று கொண்டவர் ஆனதால்,

ஆபிராம் தந்தையுமாயினார்.

தெளிவாய் தெய்வம் உடன்படி செய்வதால்,

தேவையிலாத்தோல் நீக்கினார்.

விழுதாய் இவரில் பல்லினம் எழுவதால்,

வேறு பெயரிலுமாகிறார்.

எளிதாய் பற்றை நினைத்துவிடாதீர்;

இறையே குறைகள் போக்குவார்!

(தொடக்கநூல் 17)

May be an image of text that says 'This is GOD's covenant Genesis 15:17 17When the sun had set and darkness had allen a smoking firepot with a blazing torch appeared and passed between the pieces.'

ஆண்டுகள் இருபத்து நான்கு கடந்தும்,

ஆண்டவர் சொன்னது வரவில்லை.

வேண்டிக் கேட்ட பிள்ளைப் பேறும்,

விரும்பும் ஆபிராம் பெறவில்லை.

தாண்டிய நாடுகள் பின்பு கிடந்தும்,

தருகின்ற இறையும் தரவில்லை.

ஏன்டா இப்படி, என்றே சொன்னோம்!

இப் பொறுமையிழத்தல் அறமில்லை!

(தொடக்கநூல் 17)

May be a doodle of 1 person and text that says 'Genesis 17'

ஆண்டுகள் இருபத்து நான்கு கடந்தும்,

ஆண்டவர் சொன்னது வரவில்லை. 

வேண்டிக் கேட்ட பிள்ளைப் பேறும்,

விரும்பும் ஆபிராம் பெறவில்லை. 

தாண்டிய நாடுகள் பின்பு கிடந்தும், 

தருகின்ற இறையும் தரவில்லை.

ஏன்டா இப்படி, என்றே  சொன்னோம்!

இப் பொறுமையிழத்தல் அறமில்லை!

(தொடக்கநூல் 17)

உன்னைப் பேறு பெற்றோனாக்கி,

உன் வழி உலகு பேறுறச் செய்வேன்.

என்றிறை மொழிந்த வாக்கை நம்பி,

எழுந்தவருக்கோ பிள்ளையில்லை.

நின்று நடந்து நிமிர்ந்து நோக்கி,

நின் கண் காணும் விண்மீன் எண்ணு.

ஒன்று குறையா மக்களைத் தருவேன்.

உரைக்கும் வாக்கோ கள்ளமில்லை!

(தொடக்க நூல் 15:1-21).

May be an illustration of 1 person

எழுபத்தைந்து அகவை முடித்தும்,

இளைஞனாக ஆபிராம் நடந்தார்.

பழுது இல்லாப் பற்றை பிடித்தும்,

பார்த்திராத நாடுகள் கடந்தார்.

தொழுது கொள்ள எண்ணின் கேளீர்.

தூய ஆபிராம் பற்றும் பாரீர்.

விழுது போன்ற உறவுகள் இழுக்கும்.

விட்டுவிட்டு இறை பின் வாரீர்!

(தொடக்க நூல் 12:4-5).

May be an image of map and text that says 'Haran Caspian Sea N Euphrates Tigris Mediterranean Sea Shechem Jerusalem Bethel River River Ur of the Chaldeans 100 Mi. River Nile Red Sea 0 100 100Km. Km. Persian Gulf'

மீட்பின் திட்டம்!

4. மீட்பின் திட்டம்!

பேர் புகழ் தேடிச் செல்வது சிறப்பா?

பேரிறை வழங்க, பெறுவது சிறப்பா?

யார் இதைப் புரிந்து நடக்கின்றாரோ,

இறையால் அவரும் பேறடையாரோ?

ஊர் எனும் ஊரில் ஒருவர் இருந்தார்.

உள்ளம் முழுதும் பற்றாயிருந்தார்.

பார் படைத்தாளும் இறை அழைத்தார்;

பணிந்து ஆபிராம் கீழ்ப்படிந்தார்.

(தொடக்க நூல் 12:1-4).

May be an image of text that says 'Genesis 12:1-4 Called to be Blessed'

அப்படி அன்று இடம் பெயர்ந்து

அகிலம் முழுதும் பரவினார்.

செப்பும் மொழி வேறுபாட்டால்,

சிலர் நாட்டையும் நிறுவினார்.

ஒப்பிட இயலாச் செயல்கள் புரிந்து,

ஒரு சில அரசரும் பெருகினார்.

தப்பாய் இவரைப் பலரும் புகழ,

தாமே இறை எனத் திருகினார்!

(தொடக்கநூல் 11)

May be an illustration