மெய்யும், பொய்யும்!

மெய்யும், பொய்யும்!

  1. யோவான் 8: 44.

நல்வழி: 


மெய்யின் உருவே, இயேசு. 


மேன்மை கண்டு, பேசு.

தெய்வ மகனே, இயேசு.

தெரிந்து, மெய்யைப் பேசு. 


பொய்யின் வடிவே, பிசாசு.


புரிந்து, உண்மை பேசு.

செய்யும் தீங்கும், பிசாசு.

செயலில் நன்மை, பேசு!

ஆமென். 


-கெர்சோம் செல்லையா.

ஏன் கேட்கவில்லை?

ஏன் கேட்கவில்லை?


நற்செய்தி:யோவான் 8:43. 43. என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?  


நல்வழி:

கல்லைக் கனியச் செய்யும் ஊற்று,

கடவுள் வாக்கு என்றாலும்,

சொல்லைக் கேட்க விருப்பம் அற்று,

சொல்லும் மகனை மறுக்கிறார். 

நெல்லுக்குயிராம் நீர்நிலை ஏற்று,

நிலங்கள் விளைந்து நின்றாலும்,

புல்லுக்கொத்தோர் பொய்மை பெற்று,  

புறம் காட்டி வெறுக்கிறார்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

ஓரினம்!

சாதிகள் நன்றோ?


முதலில் வந்த மனிதன் யாரோ?

முன்னோர் கூறும் ஆதம் பேரோ?

அதனை ஏற்பின், அவனினம் ஒன்றோ?

அப்படியாயின், சாதிகள் நன்றோ?

எதனை வாங்கக்  கோவில் சென்றாய்?

ஏன்தான் இந்தத் தீமை கொண்டாய்?

கதறி அழுகிறார்; ஏழைக்கிரங்கு.

காணும் சாதிகள், சொறி, சிரங்கு!


-கெர்சோம் செல்லையா. 

www.thetruthintamil.com

நாலடி நற்செய்தி!மறுமுறை பார்ப்போம்!

ஒரு முறைக்கிருமுறை பார்ப்பது நலமே.

தெரு இடம் இருக்க, போனது வலமே.

மறுமுறை நோக்கித் திருந்தும் மனமே,

இருமுறை பிறக்கும்  இறையின் இனமே!


-செல்லையா.