நம்பு!

நம்புவோமா?

நற்செய்தி: யோவான் 8:45.45.

நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை.

நல்வழி:

கண்ணில் தூய்மை காணாவிட்டால்,
காட்சி எங்ஙனம் தெளிவாகும்?
புண்ணின் நெஞ்சு நாணாவிட்டால்,
புரையும் எப்படி வெளியேறும்?
மண்ணின் தீமை கொண்டவர் நாமே.
மனதின் பொய்மை கரைத்திடுவோம்.
விண்ணின் உண்மை கண்டவராகி,
விடுதலை வாக்குரைத்திடுவோம்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா. See less