புனிதன் எழுந்து வருவாரே!

புனிதன் எழுந்து வருவாரே!
இறைவாக்கு: மத்தேயு 27:62-66.
கல்லறைக்குக் காவல்:
“மறுநாள், அதாவது ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பிலாத்திடம் கூடி வந்தார்கள். அவர்கள், ‘ ஐயா, அந்த எத்தன் உயிருடன் இருந்தபொழுது ‘ மூன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன் ‘ என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது. ஆகையால் மூன்று நாள்வரை கல்லறையைக் கருத்தாய்க் காவல் செய்யக் கட்டளையிடும். இல்லையெனில் அவருடைய சீடர்கள் ஒருவேளை வந்து அவன் உடலைத் திருடிச் சென்றுவிட்டு, ‘ இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் ‘ என்று மக்களிடம் சொல்ல நேரிடும். அப்பொழுது முந்தின ஏமாற்று வேலையைவிடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும் ″ என்றனர். அதற்குப் பிலாத்து அவர்களிடம், ‘ உங்களிடம் காவல் வீரர்கள் இருக்கிறார்கள். நீங்களே போய் உங்களுக்குத் தெரிந்தபடி கருத்தாய்க் காவல் செய்யுங்கள் ‘ என்றார். அவர்கள் போய்க் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.”

இனிய வாழ்வு:
கல்லால் மூடிக் காவல் புரிந்தால்,
கடவுளின் வாக்கு பலிக்காதோ?
சொல்லாம் இறைவன் சொன்னதைச் செய்வார்;
சொந்த மகனை இழப்பாரோ?
எல்லாம் நோக்கும் இறைவனின் செயலை
யாவரும் காண வருவீரே.
பொல்லார் வெட்க, பொய்மை அழியும்,
புனிதன் எழுந்து வருவாரே!
ஆமென்.

புனிதன் எழுந்து வருவாரே!
இறைவாக்கு: மத்தேயு 27:62-66. 
கல்லறைக்குக் காவல்:
"மறுநாள், அதாவது ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பிலாத்திடம் கூடி வந்தார்கள். அவர்கள், ' ஐயா, அந்த எத்தன் உயிருடன் இருந்தபொழுது ' மூன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன் ' என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது. ஆகையால் மூன்று நாள்வரை கல்லறையைக் கருத்தாய்க் காவல் செய்யக் கட்டளையிடும். இல்லையெனில் அவருடைய சீடர்கள் ஒருவேளை வந்து அவன் உடலைத் திருடிச் சென்றுவிட்டு, ' இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் ' என்று மக்களிடம் சொல்ல நேரிடும். அப்பொழுது முந்தின ஏமாற்று வேலையைவிடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும் ″ என்றனர். அதற்குப் பிலாத்து அவர்களிடம், ' உங்களிடம் காவல் வீரர்கள் இருக்கிறார்கள். நீங்களே போய் உங்களுக்குத் தெரிந்தபடி கருத்தாய்க் காவல் செய்யுங்கள் ' என்றார். அவர்கள் போய்க் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்."

இனிய வாழ்வு:
கல்லால் மூடிக் காவல் புரிந்தால்,
கடவுளின் வாக்கு பலிக்காதோ?
சொல்லாம் இறைவன் சொன்னதைச் செய்வார்;
சொந்த மகனை இழப்பாரோ?
எல்லாம் நோக்கும் இறைவனின் செயலை 
யாவரும் காண வருவீரே.
பொல்லார் வெட்க, பொய்மை அழியும்,
புனிதன் எழுந்து வருவாரே!
ஆமென்.
LikeLike ·  · Share
  • நாள்தோறும் நற்செய்தி

கல்லறைகூட சொந்தமில்லை!

கல்லறைகூட சொந்தமில்லை!
நல்வாக்கு: மத்தேயு 27:59-61.
“யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார்.அப்பொழுது மகதலா மரியாவும் வேறோரு மரியாவும் அங்கே கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தனர்.”

நல்வாழ்வு:
சில்லறை எதுவும் சேர்க்கவில்லை;
செல்வம் குவிப்பதும் பார்க்கவில்லை.
நல்லறை வீடும் கட்டவில்லை;
நாட்டைப் பிடிக்கவும் திட்டமில்லை.
இல்லற வாழ்வும் காணவில்லை;
ஏனைய உறவும் பேணவில்லை.
கல்லறை கூட சொந்தமில்லை;
கடவுளுக்கிதுதான் வந்த நிலை!
ஆமென்.

கல்லறைகூட சொந்தமில்லை!
நல்வாக்கு: மத்தேயு 27:59-61.
"யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார்.அப்பொழுது மகதலா மரியாவும் வேறோரு மரியாவும் அங்கே கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தனர்."

நல்வாழ்வு:
சில்லறை எதுவும் சேர்க்கவில்லை;
செல்வம் குவிப்பதும் பார்க்கவில்லை.
நல்லறை வீடும் கட்டவில்லை;
நாட்டைப் பிடிக்கவும் திட்டமில்லை.
இல்லற வாழ்வும் காணவில்லை;
ஏனைய உறவும் பேணவில்லை.
கல்லறை கூட சொந்தமில்லை;
கடவுளுக்கிதுதான் வந்த நிலை!
ஆமென்.
Like·  · Share

யாவரும் வாருங்கள்!

யாவரும் வாருங்கள்!
நற்செய்தி: மத்தேயு 27:57-58.
இயேசுவின் அடக்கம்:
“மாலை வேளையானதும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்னும் பெயர் கொண்ட செல்வர் ஒருவர் அங்கே வந்தார். அவரும் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார். அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதைக் கொடுத்துவிடக் கட்டளையிட்டான்.”
 
நல்வாழ்வு:
சிறியோருக்கு மட்டுந்தான்
சிலுவையில் இயேசு இறந்தாரா?
வறியோர் ஏழை என்பவர்தான்
வந்து அவரைச் சேர்ந்தாரா?
அறியாமையைக் கைவிடுவீர்.
அரிமத் தியாவை எண்ணிடுவீர்.
கிறித்து இறந்தார் யாவருக்கும்;
கீழோர் மேலோர் வந்திடுவீர்!
ஆமென்.
யாவரும் வாருங்கள்!
நற்செய்தி: மத்தேயு 27:57-58.
இயேசுவின் அடக்கம்:
"மாலை வேளையானதும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்னும் பெயர் கொண்ட செல்வர் ஒருவர் அங்கே வந்தார். அவரும் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார். அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதைக் கொடுத்துவிடக் கட்டளையிட்டான்."
நல்வாழ்வு:
சிறியோருக்கு மட்டுந்தான் 
சிலுவையில் இயேசு இறந்தாரா?
வறியோர் ஏழை என்பவர்தான் 
வந்து அவரைச் சேர்ந்தாரா?
அறியாமையைக் கைவிடுவீர்.
அரிமத் தியாவை எண்ணிடுவீர்.
கிறித்து இறந்தார் யாவருக்கும்;
கீழோர் மேலோர் வந்திடுவீர்!
ஆமென்.

கண்ணீர் துடைத்துத் தருபவர் யார்?

கண்ணீர் துடைத்துத் தருபவர் யார்?

அருள் வாக்கு: மத்தேயு 27:55-56.
“கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையே மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் இருந்தார்கள்.”
அருள் வாழ்வு:
அஞ்சி அடங்கும் பெண்டிர்தானே
அன்பாய்ச் சிலுவை முன் நின்றார்.
மிஞ்சி மோதிய ஆடவர் எங்கே?
மெதுவாய் நழுவி மறைகின்றார்!
கொஞ்சி மகிழும் நாளில்தானே,
கூட்டம் சேர்த்து வருகின்றார்.
கஞ்சி நீரும் இல்லா நாளில்
கண்ணீர்துடைத்துத் தருபவர் யார்?
ஆமென்.

கண்ணீர் துடைத்துத் தருபவர் யார்?

அருள் வாக்கு: மத்தேயு 27:55-56.
"கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையே மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் இருந்தார்கள்."
அருள் வாழ்வு:
அஞ்சி அடங்கும் பெண்டிர்தானே 
அன்பாய்ச் சிலுவை முன் நின்றார்.
மிஞ்சி மோதிய ஆடவர் எங்கே?
மெதுவாய் நழுவி மறைகின்றார்!
கொஞ்சி மகிழும் நாளில்தானே,
கூட்டம் சேர்த்து வருகின்றார்.
கஞ்சி நீரும் இல்லா நாளில் 
கண்ணீர்துடைத்துத் தருபவர் யார்?
ஆமென்.

அருமைச் சான்று!

 

திருவாக்கு: மத்தேயு 27:54
“நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, ‘ இவர் உண்மையாகவே இறைமகன் ‘ என்றார்கள்.”

அருட்சான்று:
அறைந்தவன் உரைத்தான் அருமைச் சான்று,
அன்பர் இயேசு இறைமகன் என்று.
குறைந்தவன் நானும் குரைப்பேன் இன்று,
கிறித்து எனக்கு எல்லாம் என்று!
நிறைந்த வாழ்வைக் காண விரும்பு;
நண்பா, நீயும் சிலுவை முன்பு.
உறைந்த பனியின் வெண்மை அன்பு,
உள்ளில் நிரம்ப உடன் திரும்பு!
ஆமென்.

அருமைச் சான்று!<br />
திருவாக்கு: மத்தேயு 27:54<br />
"நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, ' இவர் உண்மையாகவே இறைமகன் ' என்றார்கள்."</p>
<p>அருட்சான்று:<br />
அறைந்தவன் உரைத்தான் அருமைச் சான்று,<br />
அன்பர் இயேசு இறைமகன் என்று.<br />
குறைந்தவன் நானும் குரைப்பேன் இன்று,<br />
கிறித்து எனக்கு எல்லாம் என்று!<br />
நிறைந்த வாழ்வைக் காண விரும்பின்,<br />
நேராய் வருவீர் சிலுவை முன்பு.<br />
உறைந்த பனியின் வெண்மை போன்று<br />
உள்ளம் மாற உடன் திரும்பு!<br />
ஆமென்.
LikeLike ·  · Share

நல்வாக்கும் நல்வாழ்வும்!

இன்றைய இறைவாக்கு!

நல்வாக்கு: மத்தேயு 27:51-53
“அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன. கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள்.”

நல்வாழ்வு:
அஞ்சிக் கிடக்கும் மானிடரே,
அன்பை மறைத்தது அத்திரையே.
கெஞ்ச வேண்டாம் இனி நீரே,
கிறித்து இறந்து, கிழித்தாரே!
நெஞ்சக் கல்லறை திறப்பீரே;
நேர்மை எழும்புதல் காண்பீரே.
பிஞ்சுக் குழந்தை போல் நீரே,
புதிய வழியில் நடப்பீரே!
ஆமென்.

இன்றைய இறைவாக்கு!
நல்வாக்கு: மத்தேயு 27:51-53
"அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன. கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள்."

நல்வாழ்வு:
அஞ்சிக் கிடக்கும் மானிடரே,
அன்பை மறைத்தது அத்திரையே.
கெஞ்ச வேண்டாம் இனி நீரே,
கிறித்து இறந்து, கிழித்தாரே!
நெஞ்சக் கல்லறை திறப்பீரே;
நேர்மை எழும்புதல் காண்பீரே.
பிஞ்சுக் குழந்தை போல் நீரே,
புதிய வழியில் நடப்பீரே!
ஆமென்.
LikeLike ·  · Share

தமிழா, தமிழா!

தமிழா, தமிழா!

வள்ளுவரும் அவ்வையரும்
வந்தின்று பாடவரின்,
தள்ளுவரோ தமிழ்நாட்டார்,
தாழ்ந்த குலம் எனக்கூறி?

உள்ளிருக்கும் சாதிவெறி,
ஒழியாதிருந்துவிடின்,
கள்ளிறக்கும் குரங்காவோம்,
காண்பவர்முன் உருமாறி!

-கெர்சோம் செல்லையா.

தமிழா, தமிழா!

வள்ளுவரும் அவ்வையரும் 
வந்தின்று பாடவரின்,
தள்ளுவரோ தமிழ்நாட்டார்,
தாழ்ந்த குலம் எனக்கூறி?

உள்ளிருக்கும் சாதிவெறி,
ஒழியாதிருந்துவிடின்,
கள்ளிறக்கும் குரங்காவோம்,
காண்பவர்முன் உருமாறி!

-கெர்சோம் செல்லையா.
LikeLike ·  · Sha

ஏன் இறந்தீர் இயேசுவே?

 

நற்செய்தி: மத்தேயு 27:50.
“இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்.”

நல்வாழ்வு:
எல்லாம் இழந்து யாவையும் தந்து,
ஈனச் சிலுவையில் நீர் இறந்தீர்.
இல்லா நாங்கள் இறையுள் வந்து,
யாவும் அடைய வழி திறந்தீர்.
நல்லாயன் போல் உயிரை ஈந்து,
நலிந்த இனத்தை மீட்டெடுத்தீர்.
எல்லா நாளும் இதனை நினைந்து,
இறைப்பணி செய்ய அருள் கொடுப்பீர்!
ஆமென்.

ஏன் இறந்தீர் இயேசுவே?</p><br />
<p>நற்செய்தி: மத்தேயு 27:50.<br /><br />
"இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்."</p><br />
<p>நல்வாழ்வு:<br /><br />
எல்லாம் இழந்து யாவையும் தந்து,<br /><br />
ஈனச் சிலுவையில் நீர் இறந்தீர்.<br /><br />
இல்லா நாங்கள் இறையிடம் வந்து,<br /><br />
யாவும் அடைந்திட வழி திறந்தீர்.<br /><br />
நல்லாயன் போல் உயிரை ஈந்து,<br /><br />
நலிந்த இனத்தை மீட்டெடுத்தீர்.<br /><br />
எல்லா நாளும் இதனை நினைந்து,<br /><br />
இறைபுகழ் பாட எமை அழைத்தீர்!<br /><br />
ஆமென்.
LikeLike ·  · Share

வேறு வேறே!

வேறு வேறே!
மண்மேல் காணும் மரஞ்செடி வேறே;
மடிந்து பிறக்கும் வைரம் வேறே.
உண்மை என்று உரைத்தல் வேறே;
உள்ளில் உறையும் மெய்யும் வேறே.
எண்ணிப் பார்க்கும் அறிஞர் வேறே;
ஏற்க மறுக்கும் இழிஞரும் வேறே.
கண்ணில் காட்டும் இறையுள் நீரே,
காண வாரீர், களித்திடுவீரே!
ஆமென்.
Photo: வேறு வேறே!
மண்மேல் காணும் மரஞ்செடி வேறே;
மடிந்து பிறக்கும் வைரம் வேறே.
உண்மை என்று உரைத்தல் வேறே;
உள்ளில் உறையும் மெய்யும் வேறே.
எண்ணிப் பார்க்கும் அறிஞர் வேறே;
ஏற்க மறுக்கும் இழிஞரும் வேறே.
கண்ணில் காட்டும் இறையுள் நீரே,
காண வாரீர், களித்திடுவீரே! 
ஆமென்.

எப்படிக் கேட்கிறோம்?

நல்வாக்கு: மத்தேயு 27:47-49.
“அங்கே நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, ‘ இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் ‘ என்றனர். உடனே அவர்களுள் ஒருவர் ஓடிச் சென்று, கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து அதைக் கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார். மற்றவர்களோ, ‘பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம்’ என்றார்கள்.”
நல்வாழ்வு:
ஒன்றெனக் கண்டு உண்மை உரைத்தால்,
மூன்றென மாற்றி விளக்கம் சொல்வார்.
கன்றினைக் காட்டி வாழச் சொன்னால்,
பன்றியும் கூட்டிப் பிடித்துச் செல்வார்.
அன்றைய நாளின் அறியாமையைத்தான்
இன்றும் மனிதர் இறுகப் பிடித்தார்.
நன்றாய்க் கேட்க விருப்பிருப்போர்தான்
என்றும் உண்மை தெரிந்து முடிப்பார்!
ஆமென்.
எப்படிக் கேட்கிறோம்?
நல்வாக்கு: மத்தேயு 27:47-49.
"அங்கே நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, ' இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் ' என்றனர். உடனே அவர்களுள் ஒருவர் ஓடிச் சென்று, கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து அதைக் கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார். மற்றவர்களோ, 'பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம்' என்றார்கள்."
நல்வாழ்வு:
ஒன்றெனக் கண்டு உண்மை உரைத்தால்,
மூன்றென மாற்றி விளக்கம் சொல்வார்.
கன்றினைக் காட்டி வாழச் சொன்னால்,
பன்றியும் கூட்டிப் பிடித்துச் செல்வார்.
அன்றைய நாளின் அறியாமையைத்தான் 
இன்றும் மனிதர் இறுகப் பிடித்தார்.
நன்றாய்க் கேட்க விருப்பிருப்போர்தான் 
என்றும் உண்மை தெரிந்து முடிப்பார்!
ஆமென்.