நம்பிக்கையற்றவரே!

நம்பிக்கையற்ற தலைமுறையே!

நற்செய்தி மாலை: மாற்கு 9:16-19.
“அவர் அவர்களை நோக்கி, ‘ நீங்கள் இவர்களோடு எதைப்பற்றி வாதாடுகிறீர்கள்? ‘ என்று கேட்டார். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் அவரைப் பார்த்து, ‘ போதகரே. தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன். அது அவனைப் பிடித்து அந்த இடத்திலேயே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப் பற்களை நெரிக்கிறான்; உடம்பும் விறைத்துப்போகிறது. அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன்; அவர்களால் இயலவில்லை ‘ என்று கூறினார். அதற்கு அவர் அவர்களிடம், ‘ நம்பிக்கையற்ற தலைமுறையினரே. எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள் ‘ என்று கூறினார்.”

நற்செய்தி மலர்:

நம்பிக்கை அற்ற தலைமுறையே,
நன்கு நோக்கு உன் குறையே!

கும்பிடச் செல்லும் கோயிலிலே,
கிறித்தவன் என்பதில் பயனிலையே!

எம்பி நிற்கவும் வலுவற்றே,
ஏழையர் கிடக்கிறார், பார் சற்றே!

தும்பிக் கையாய் நீ இன்றே,
தூக்கி உயர்த்து, இது நன்றே!

ஆமென்.

Image may contain: outdoor and nature
LikeShow More Reactions

Comment

மானம் காக்கும் பெரியார்!

மானம் காக்கும் பெரியார்!

உடலை மறைக்கவே உடையாம்;
ஊருக்குத் திறப்பின் கடையாம்.
கடவுள் அளித்த கொடையாம்,
கற்பு நமது படையாம்.

திடல்போல் திறந்து திரிவார்,
தெய்வ வழியைத் தெரியார்.
மடமை விட்டுப் புரிவார்,
மானம் காக்கும் பெரியார்!

– கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person
LikeShow More Reactions

Comment

வாதாடும் மாந்தர்

வாதாடும் மாந்தரெல்லாம்…
நற்செய்தி மாலை: மாற்கு 9:14-15.
“அவர்கள் மற்ற சீடரிடம் வந்தபொழுது, பெருந்திரளான மக்கள் அவர்களைச் சூழ்ந்திருப்பதையும் மறைநூல் அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர். மக்கள் அனைவரும் இயேசுவைக் கண்ட உடனே மிக வியப்புற்று அவரிடம் ஓடிப்போய் அவரை வாழ்த்தினர்.”

நற்செய்தி மலர்:
வாதாடும் மாந்தரெல்லாம்
வாழ்த்தித்தான் தொடங்குகிறார்.
சூதாடும் போர் மறைக்கச்
சொற்கிடங்காய் மடங்குகிறார்.
தீதாடும் நிலை உணரார்,
தேய்ந்தோட மயங்குகிறார்.
தூதோடு வாழ்பவர்தான்,
தெய்வத்தால் இயங்குகிறார்!
ஆமென்.

Image may contain: drawing
LikeShow More Reactions

Comment

எலியா போன்று பேசு!

எலியா போல் பேசுகின்ற இறைமக்கள்!
நற்செய்தி மாலை: மாற்கு 9:11-13.
“அவர்கள் அவரிடம், ‘ எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர் கூறுவதேன்? ‘ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘ எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் மானிட மகன் பல துன்பங்கள் படவும் இகழ்ந்து தள்ளப்படவும் வேண்டுமென்று அவரைக் குறித்து எழுதப்பட்டுள்ளதே, அது எப்படி? ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியா வந்துவிட்டார். அவர்கள் தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவரைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளவாறே அவை நிகழ்ந்தன ‘ என்றார்.”

நற்செய்தி மலர்:
நலிந்தோரை நசுக்குகின்ற
நஞ்சான உலகிலே,
எலியா போல் பேசுகின்ற
இறைமக்கள் தாருமே.
மெலிந்தோரை மீட்டிடவே,
பலியான இயேசுவே,
வலிந்து அழைத்தோமே;
வாழ்விக்க வாருமே!
ஆமென்.

Image may contain: outdoor, one or more people and text
LikeShow More Reactions

Comment

தெளிவுறும் காலம் வரும்வரை

அடியார் தெளிவுறும் காலம் வரையில்….
நற்செய்தி மாலை: மாற்கு 9:9-10.
“அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், ‘ மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது ‘ என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, ‘ இறந்து உயிர்த்தெழுதல் ‘ என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.”
நற்செய்தி மலர்:
அடியார் தெளிவுறும் காலம் வரையில்,
அமைதியில் கற்பார், அறிவீரே.
அறியாதவராய்ச் சொற்போர் புரிதல்,
அழகிலை என்பதும் தெரிவீரே.
விடியா இருட்டில் வெளிச்சம் கொடுத்தல்,
விளக்கின் பணிதான் அறிவீரே!
வேண்டும் எண்ணெய் நமது விளக்கில்;
விண்ணின் விருப்பைத் தெரிவீரே!
ஆமென்.

Image may contain: 1 person , night
LikeShow More Reactions

Comment

இயல் இசைப் பொழிவு கேட்பவரே!

இயல் இசைப் பொழிவைக் கேட்பவரே!
நற்செய்தி மாலை: மாற்கு 9:7-8.
“அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, ″ என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள் ″ என்று ஒரு குரல் ஒலித்தது. உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.”

நற்செய்தி மலர்:
எங்கெல்லாமோ ஓடியும் ஆடியும்,
இயலிசைப் பொழிவைக் கேட்டீரே!
இங்கே நம்முள் உறைந்திருக்கும்
இறை மொழி கேட்க மாட்டீரே!
அங்கெல்லாம் போய் வந்தபின்பும்
அமைதி கேட்டது நம் மதியே!
மங்காச் செல்வம் தெய்வ அன்பே;
மகிழ்ந்து ஏற்றால், நிம்மதியே!
ஆமென்.

Image may contain: one or more people
LikeShow More Reactions

Comment

மலை மேல் இருத்தல்…

மலைமேல் இருத்தல்…
நற்செய்தி மாலை: மாற்கு 9:4-6.
“அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். பேதுரு இயேசுவைப் பார்த்து, ‘ ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம் ‘ என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.”

நற்செய்தி மலர்:
மலை மேல் இருத்தல் நல்லது என்று,
மறுவுரு கண்டவர் எண்ணுகிறார்.
தலைக்கொரு கூடம் அமைக்கும் தம்மை
தலைவராய் உயரப் பண்ணுகிறார்.

கலையழகுள்ள மலையில் இறங்கும்
காட்டு அருவியைக் காண்பவர் யார்?
நிலைகள் உயரும், நேர்மை பரவும்;
நீர்போல் இறங்கி, பயன்தரப் பார்!
ஆமென்.

Image may contain: plant, outdoor, nature and water
LikeShow More Reactions

Comment

செய்வோம் நன்மை!

அன்புடன் செய்வோம் நன்மை!
நற்செய்தி மாலை: மாற்கு 9:1-3.
” மேலும் அவர் அவர்களிடம், ‘ இங்கே இருப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார். ஆறு நாள்களுக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின.”

நற்செய்தி மலர்:
தோற்றம் மாறிய இயேசுவின் உடையோ,
தூய்மையில் உயர்ந்த வெண்மை.
மாற்றம் இல்லா மனிதரின் நெஞ்சோ,
மடமையில் உறைந்த தன்மை.
ஏற்றம் கொண்ட இறைப்பணியாலே,
எங்கும் உரைப்போம் உண்மை.
ஆற்றல் இல்லா மனிதரும் மீள்வார்;
அன்புடன் செய்வோம் நன்மை!
ஆமென்.

வீண் வீண்!

வீண் வீண், வாழ்வே வீண்!
நற்செய்தி மாலை: மாற்கு 8:36-38.
“ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? பாவத்தில் உழலும் இவ்விபசாரத் தலைமுறையினருள், என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப்படுவார்’ என்றார்.”

நற்செய்தி மலர்:
கொட்டும் மழையெனப் பொன்பொருளும்,
கோட்டை கொத்தள வீடுகளும்,
வெட்டும் சுரங்கத் தோட்டங்களும்,
வேண்டும் அளவில் சேர்த்தாலும்,
தட்டும் மைந்தன் தந்தருளும்,
தந்தையாம் கடவுளின் விடுதலையை
மட்டும் ஒருவர் பெற மறுத்தால்,
மனிதப் பிறப்பே வீணாகும்!
ஆமென்.

எமது வேலை!

எம் வேலை, உம் வேலை!

எண்ணிக்கையைப் பெருக்கும் நோக்கில்
இயேசுவின் வாக்கு உரைக்கவில்லை.
மண்ணில் மாபெரும் அரசு அமைத்து,
மாற்றார் வீழ்த்தவும், குரைக்கவில்லை.

கண்ணில் காணா கடவுளின் அன்பைக்
கருத்தாய்ச் சொல்வதே, எம் வேலை.
பண்ணும் தீச்செயல் தவறென உணர்ந்து,
பற்றால் மீளவதோ, உம் வேலை!
ஆமென்.

– கெர்சோம் செல்லையா.