படைப்பின் அழகு!

படைப்பின் அழகு!


படைப்பின் அழகைப் பார்க்கும்போது,

படைக்கும் இறையைப்  பார்ப்போமே.

கிடைக்கும் பொருளைச்  சேர்க்கும்போது,

கொடுக்கும்  அறிவும் சேர்ப்போமே.

உடைக்கும் நம் வினை தோற்கும் என்று,

உணர மறுப்பின், தோற்போமே.

 துடைக்கும் மகனே ஏற்பார் இன்று;


தூய ஆவியில் ஏற்போமே!

-கெர்சோம் செல்லையா.