நல்வழி:
வீட்டுப் பிள்ளையை வேலைக்காரர்,
விரும்பாப் பேயென விரட்டுகிறார்.
கூட்டுச் சேர்ந்து, கூக்குரல் போட்டு,
கொடியவனாக்கப் புரட்டுகிறார்.
கேட்டுப் பார்த்தால், கிறித்து நல்கும்,
கேடிலா வாக்கை யார் தருவார்?
நாட்டோர் நாட்டம் நஞ்சேயென்றால்,
நல் வாழ்வை யார் பெறுவார்?
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.