ஒளி பரவட்டும்!

ஒளி பரவுக என்றே உரைத்து,

உலகப் பணியைத் தொடங்கினார் இறையே.
வளி பரவுதல் நாமும் தெரிந்து,
வறியோர்க்கறிவை வழங்குவோம் முறையே.
தெளிவடைவோர் கொஞ்சமே எனினும்,
தேடுவோருக் கில்லை குறைவே..
புளி எடுத்து மாவில் பிசைந்தால்,
புசிக்கும் அப்பம் ருசிக்கும் நிறைவே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.

இணைக்கும் ஆவியர்!

​நற்செய்தி மாலை: மாற்கு 3:23-25.

“ஆகவே அவர் அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: ‘ சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது.”
நற்செய்தி மலர்:
பிணக்கம், பிரிவு, பிளவுகளெல்லாம்
பிசாசின் வேலை, புரிந்திடுவீரே.
இணக்கம், உறவு, சேர்த்தலெல்லாம்
இறையின் பணியாம், தெரிந்திடுவீரே.
மணக்கும் கிறித்தவ பணிகளிலெல்லாம்
மனிதரை இணைப்பவர் ஆவியராமே.
உணர்ந்தால் நன்மை; இதுவே உண்மை;
ஒற்றுமை வெறுப்பின் பாவியராமே!
ஆமென்.

பேய்களின் தலைவன்!

​பேய்களின் தலைவன்!
நற்செய்தி மலர்: மாற்கு 3:21-22.
“அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர். மேலும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், ‘ இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது ‘ என்றும் ‘ பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான் ‘ என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.”
நற்செய்தி மலர்:
பேய்களின் தலைவன் என்றும் விளிப்பார்;
பித்தம் பிடித்தோன் என்றும் பழிப்பார்.
வாய்மொழியாலே வறுத்து எடுப்பார்.
வரம்பினைமீறி வன்முறை தொடுப்பார்.
நாய்களைப் போன்று இவரும் குரைப்பார்;
நன்றியை மட்டும் காட்ட மறுப்பார்.
தாயினும் சிறந்த தந்தையின் மகன்தான், 
தாங்கி நம்மை இவரிடம் மீட்பார்!
ஆமென்.

உண்பதே வாழ்க்கை என்போர் உலகில்…..

உண்ண மறந்த ஊழியர்!
நற்செய்தி மாலை: மாற்கு 3:20.
“அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.”
நற்செய்தி மாலை:
உண்பதே வாழ்க்கை என்போர் உலகில்,
ஊணினை மறந்து உழைப்பவர் யார்?
விண்ணையும் துறந்து, வீதியில் வந்து,
விருந்து படைக்கும் மறைமகனார்.
பண்பிலார் நடுவில் வாழும் நம்மை,
பரிவாய் விருந்திற்கழைப்பவர் யார்?
எண்ணிட இயலா வகைகளில் ஈந்து,
என்றும் தந்திடும் இறைமகனார்!
ஆமென்.

காட்டிக் கொடுத்த யூதாசும்…

காட்டிக் கொடுத்த யூதாசும்…

நற்செய்தி மாலை: மாற்கு 3:16-19.
“அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் – இவ்விருவருக்கும் ‘இடியைப் போன்றோர்’ எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார். – அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.”
நற்செய்தி மலர்:
காட்டிக் கொடுத்த யூதாசும் 
கடவுள் பணிக்கு வந்தவனே.
வீட்டைத் துறந்து உழைப்பதற்கு,
விரும்பி தன்னைத் தந்தவனே.
நோட்டம் காசில் வைத்ததினால்,
நேர்மை இழந்து போனானே.
வேட்டைக்கார ஊழியர்போல்,
கேட்டின் மகன் ஆனானே!
ஆமென்.

பெண்மையே வாழ்க!

"இன்று உலக பெண்கள்<br />
தினமாமே ................</p>
<p>                    - #CartoonHasifkhan"
தாயை நினைத்துப் பார்ப்போம்;
தமக்கை, தங்கையும் சேர்ப்போம்.
வாய்த்த துணையுள் மகிழ்வோம்;
வாழ்க பெண்மை, புகழ்வோம்!
-கெர்சோம் செல்லையா.

கோணல் குறுக்கு வழிகளின் வெற்றி,
கோபுர உயர்வைக் கட்டிடுதே.
நாணயம் நேர்மை இல்லாதிருந்தும்,
நாணய காசாய்க் கொட்டிடுதே.
ஆணவச் செருக்கு அதனால் பெருக,
அவரது வாழ்வை வெட்டிடுதே.
மாணவராக மறைநூல் கற்போம்;
மாறுதல் நம்மைத் தட்டிடுதே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.

பன்னிரு பேரைத் தெரிந்தெடுத்தவரே!

பன்னிரு பேரைத் தெரிந்தெடுத்தவரே!

நற்செய்தி மாலை: மாற்கு 3:13-15.
“அதன்பின்பு இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.”
நற்செய்தி மலர்:
பன்னிரு பேரைத் தெரிந்தெடுத்தவரே,
பணியைக் கொடுத்து அனுப்பி வைத்தீரே.
சென்னிற வேர்வை சிந்தி அவரே,
செய்தியைக் கொடுத்து உமைப் புகழ்ந்தாரே.
என்னிரு கையிலும் பொறுப்பீந்தவரே,
எழுதி, பேசி உமைத் தொழுவேனே.
நன்னிலமாக நெஞ்சுகள் வரவே,
நற்செய்தியாலே  நான் உழுவேனே!
ஆமென்.


அருள் சுரக்கட்டும்!

அருள் சுரக்கட்டும்!

தோண்டத் தோண்டச் சுரப்பதுதான்,

தூய நீரின் அழகாகும்.
வேண்ட வேண்டக் கொடுப்பதுதான்,
விண் அரசின் புகழாகும்.
நீண்ட காலம் வேண்டுகிறேன்;
நிதமும் பாறையில் தோண்டுகிறேன்.
ஆண்ட, ஆளும் அரசர்களில்
அருள் சுரக்கவே, தூண்டுகிறேன்!
ஆமென்

​.

தீய ஆவிக்கும் தெரியும்!

தீ​ய ஆவிக்கும் தெரியும்!
நற்செய்தி மாலை: மாற்கு 3:11-12.
“தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, ‘ இறைமகன் நீரே ‘ என்று கத்தின. அவரோ, தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.”
நற்செய்தி மலர்:
தீயஆவியரும், தெரிந்தே ஆடுகின்றார்;
திருமகன் இயேசுவின்முன், தோற்று அடங்குகின்றார்.
மாயும் மனிதர்தான், மயங்கிக் கிடக்கின்றார்;
மன்னனின் இரக்கத்தை, மறுத்துத் தடுக்கின்றார்.
நேய நெறி உரைத்தும், நின்று கேட்பவர் யார்?
நேர்வழி தெரிபவர் யார்? நிம்மதி பெறுபவர் யார்?
காயம் நிறைந்தவராய், கண்முன் வருகின்றார்,
கடவுளின் திருமகனார்; காண்பார் மீட்புறுவார்!
ஆமென்.