யோவான் 8:51-53.

நல்வழி: 


வீட்டுப் பிள்ளையை வேலைக்காரர்,

விரும்பாப் பேயென விரட்டுகிறார். 

கூட்டுச் சேர்ந்து, கூக்குரல் போட்டு,

கொடியவனாக்கப் புரட்டுகிறார்.

கேட்டுப் பார்த்தால், கிறித்து நல்கும்,

கேடிலா வாக்கை யார் தருவார்?

நாட்டோர் நாட்டம் நஞ்சேயென்றால்,

நல் வாழ்வை யார் பெறுவார்? 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.