யோவான் 8: 59

வெறி!


நற்செய்தி: யோவான் 8:59. 

நல்வழி:


வெறியால் அழியும் வீண் மனிதர்,

வெறுப்பில் இயேசுவை ஏற்காமல்,

எறிவார் கல்லை, கொல்வதற்கு.

எடுக்கும் இடமோ திருக்கோவில்.

நெறியால் வழியும் விண் மனிதர்,

நேரெதிர் வாக்கு கேட்டாலும்,  

அறிவால் பொறுத்து அகன்றிடுவர்;

அவர் செல்லிடமே அருட்கோவில்! 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.