திரும்பிப் பார்க்கிறேன்!

திரும்பிப் பார்க்கிறேன்!

தாயின் அன்பு கண்டிருந்தும்,

தந்தை இறையை நோக்காது,

பேயின் வழிமுறை நாடினேன்;

பிணக்குழியிலே, வாடினேன்.

நோயின் கைப்பு கொண்டிருந்தும்,

நொந்து மடிய விரும்பாது,

நேயன் இயேசுவைத் தேடினேன்;

நிமிர்த்தப்படவே, பாடினேன்!

-கெர்சோம் செல்லையா.