திரும்பிப் பார்க்கிறேன்!
தாயின் அன்பு கண்டிருந்தும்,
தந்தை இறையை நோக்காது,
பேயின் வழிமுறை நாடினேன்;
பிணக்குழியிலே, வாடினேன்.
நோயின் கைப்பு கொண்டிருந்தும்,
நொந்து மடிய விரும்பாது,
நேயன் இயேசுவைத் தேடினேன்;
நிமிர்த்தப்படவே, பாடினேன்!
-கெர்சோம் செல்லையா.