ஒளி – இருள்!

ஓய்ந்து ஒடுங்கும் ஒரு காலம்!

நற்செய்தி: யோவான் 9: 4-5. 

5. நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்.

நல்வழி:


ஓய்ந்து ஒடுங்கும் ஒரு காலம்,

உண்டு நமக்கும் இருட்காலம். 

சாய்ந்து ஒதுங்கும் செங்கதிரும்,

சவப்பெட்டிக்குள் அடங்கிவிடும். 

ஆய்ந்து பார்ப்போம்  எதிர் காலம்;

ஆண்டவர் திறக்கும் புதிர் காலம். 

பாய்ந்து பரவும் இறையொளியும்; 

பார்க்க, நாமும்  தெளிவாவோம்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.