ஏன் கேட்கவில்லை?

ஏன் கேட்கவில்லை?


நற்செய்தி:யோவான் 8:43. 43. என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?  


நல்வழி:

கல்லைக் கனியச் செய்யும் ஊற்று,

கடவுள் வாக்கு என்றாலும்,

சொல்லைக் கேட்க விருப்பம் அற்று,

சொல்லும் மகனை மறுக்கிறார். 

நெல்லுக்குயிராம் நீர்நிலை ஏற்று,

நிலங்கள் விளைந்து நின்றாலும்,

புல்லுக்கொத்தோர் பொய்மை பெற்று,  

புறம் காட்டி வெறுக்கிறார்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.