அன்பே அழகு!

அன்பே அழகு!  

கண்முன் காணும் எழைக்கிரங்கு; 


காணா இறையை இப்படி வணங்கு.  

மண் உடம்பாயினும் கடவுளின் வடிவு; 


மாற்றம் இல்லை; யாவரும் உறவு.  


விண் எனும் பேறு உண்டென நம்பு; 

வேண்டும் நம்முள் அவ்வருட் பண்பு.  


புண் படுத்தாது பிறரிடம் பழகு;  


புரியும் செயலில் அன்பே அழகு.  

-கெர்சோம் செல்லையா.   

விண் வீடு!

விண் வீடு!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:43.  

கிறித்துவில் வாழ்வு:  
திருந்திய கள்வனின் உள்ளம் கண்டு,  
தெய்வ மைந்தன் இடமளித்தார்.  
விருந்தினை ஒத்த விண் வாழ்வுண்டு;   
வீடு பேற்றையும் உடனளித்தார். 
வருந்திய நிலையிலும் அருளாலன்று,    
வாழு என்று மீட்பளித்தார். 
பொருந்திய திறவுகோல் பற்று என்று,    
புரியும்படியாய் விடையளித்தார்!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.   

குடியரசு நாள் வாழ்த்து!

72-ஆம் குடியரசு நாள் வாழ்த்து!

விடியல் தெரிவது எக்காலம்?

அடி அடியென, அடிகள் கொடுத்து,

அடிமையாக்கினர் அக்காலம்.

குடி குடியென, குடிக்கக் கொடுத்து,

குடியைக் கெடுக்கிறார் இக்காலம்.

விடி விடியென வேண்டும் நமக்கு,

விடியலைத் தருவது எக்காலம்?

படி படியென, பண்பை விதைத்து,

பணிவோர் ஆளும் நற்காலம்!

-கெர்சோம் செல்லையா.இறையன்பு இல்லம்,24, செக்ரெட்டேரியட் காலனி,இலட்சுமிபுரம்/இரட்டை ஏரி,குளத்தூர், சென்னை-600099.

திருந்தும் திருடனும், திருந்தா மனிதரும்!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:40-42.


40. மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
41. நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
42. இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.  


கிறித்துவில் வாழ்வு:  


இறுதி வேளை இயேசுவை ஏற்பேன்,  

என்று நழுவும் நண்பர்களே,  

உறுதியாக உம்மில் வருமோ,  

உணர்ந்த கள்வன் பண்புகளே?  

அறுதி நேரம் அறியா வாழ்வில்,  

அளிக்கும் நொடிகள் செல்வங்களே.   

கருதி இன்றே திருந்தினால்தான்,     

கடவுள் ஏற்பார், பிள்ளைகளே! 


ஆமென்.  


-கெர்சோம் செல்லையா.    

திருந்திய கள்வன்!

கிறித்துவில் வாழ்வு:  
இறுதி வேளை இயேசுவை ஏற்பேன்,  
என்று நழுவும் நண்பர்களே,  
உறுதியாக உம்மில் வருமோ,  
உணர்ந்த கள்வன் பண்புகளே?  
அறுதி நேரம் அறியா வாழ்வில்,  
அளிக்கும் நொடிகள் செல்வங்களே.   
கருதி இன்றே திருந்தினால்தான்,     
கடவுள் ஏற்பார், பிள்ளைகளே! 
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.    

கிறித்துவில் வாழ்வு:  
இறுதி வேளை இயேசுவை ஏற்பேன்,  
என்று நழுவும் நண்பர்களே,  
உறுதியாக உம்மில் வருமோ,  
உணர்ந்த கள்வன் பண்புகளே?  
அறுதி நேரம் அறியா வாழ்வில்,  
அளிக்கும் நொடிகள் செல்வங்களே.   
கருதி இன்றே திருந்தினால்தான்,     
கடவுள் ஏற்பார், பிள்ளைகளே! 
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.    

கிறித்துவில் வாழ்வு:  
இறுதி வேளை இயேசுவை ஏற்பேன்,  
என்று நழுவும் நண்பர்களே,  
உறுதியாக உம்மில் வருமோ,  
உணர்ந்த கள்வன் பண்புகளே?  
அறுதி நேரம் அறியா வாழ்வில்,  
அளிக்கும் நொடிகள் செல்வங்களே.   
கருதி இன்றே திருந்தினால்தான்,     
கடவுள் ஏற்பார், பிள்ளைகளே! 
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.    

இகழும் கள்வன்!

இகழும் கள்வன்!  
கிறித்துவின்வாக்கு:  லூக்கா 23: 39.  

39
  அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.  

கிறித்துவில் வாழ்வு:  
என்ன  எதுவெனத் தெரியாமல்,  
இகழ்வோர் நம்மில் பலருண்டு.  

சொன்ன கள்வனும் இவரைப்போல், 
சொல்வதில் என்ன வியப்புண்டு?  
முன்னும் பின்னும் அறியாமல்,  
மொழிந்தால் என்ன பயனுண்டு? 
இன்னாள் இதனை நாமுணர்ந்து,  
ஏசுவை அறிந்தால் மீட்புண்டு!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.    

மும்மொழிகள்!

மூன்று மொழிகள்!
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 23: 38.  
38  இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.  

கிறித்துவில் வாழ்வு:  
மூன்று மொழிகளில் எழுதி வைத்தார்,  
முள்முடி வேந்தனின் வெளிப்பாட்டை.  
தோன்று மொழிகளை நாம் மதித்தால்,  

துயருந் துவட்டுமோ இந்நாட்டை?  
சான்று இதுவென நான் உரைத்தால்,  

சண்டைக்கெடாதீர் இப்பாட்டை.  
ஈன்று எடுக்கிற இறையறிவால், 
எங்கும் ஒழியும் மொழிவேட்டை!
ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.  

ஏளனம்!

ஏளனம் செய்கிறார்!  
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 23: 35-37.  

35  ஜனங்கள் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக் கொள்ளட்டும் என்றார்கள்.

36  போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:

37  நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

யாரிவர் இயேசு, என்றென அறியார், 

ஏளனம் செய்து இகழ்கின்றார்.   

வேரினை முறித்து விளைச்சல் கேட்பார்;

வீணாய் மண்ணை அகழ்கின்றார்.

ஊரினில் இவர்போல் பலபேர் உள்ளார்;  

உண்மை இழந்துத் திகழ்கின்றார்.  

பாரினை மீட்கும் பணியென அறிவார்,  

பணிந்து இறையைப் புகழ்கின்றார்.  

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.  

பொங்கல்!

பொங்கல் வாழ்த்துகள்!  

ஒருவரை ஒருவர் மதித்து,  

ஒவ்வொருவரையும் பொறுத்து,  
பெருமை, பிளவும்  வெறுத்து, 
பெரியோர் உண்பார் பொங்கல்.  
தெருவினில் குப்பை தவிர்த்து,  
தெரியாத் தொற்றும் தடுத்து,  
அருவருப்பனைத்தும் விடுத்து,  

அன்பாய் உண்போம் பொங்கல்!  
வாழ்த்துகள்!    
-கெர்சோம் செல்லையா,
இறையன்பு இல்லம்,
24, செக்ரெட்டேரியட் காலனி,  
இலட்சுமிபுரம்/இரட்டை ஏரி, 
குளத்தூர், சென்னை-600099.