இறைவன் மகிழ்ந்தார்.

நற்செய்தி மாலை: மாற்கு 1:11.
“அப்பொழுது, ‘ என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ‘ என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.”

நற்செய்தி மலர்:
எதை முடிக்க இறைமகன் வந்தார்?
எண்ணிப் பார்த்து ஏற்றிடுவோம்?
அதைக் கண்டு இறைவன் மகிழ்ந்தார்.
அவருள் இணைந்து போற்றிடுவோம்.

இதைக் கேட்கும் நம்பணி என்ன?
இந்த வாழ்வின் பொருளறிவோம்.
உதை பந்தாய்த் துள்ளுதல் அல்ல;
உண்மை மகனாய் அருள்பெறுவோம்!
ஆமென்.

நற்செய்தி மாலை: மாற்கு 1:11.<br />
"அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது."</p>
<p>நற்செய்தி மலர்:<br />
எதை முடிக்க இறைமகன் வந்தார்?<br />
எண்ணிப் பார்த்து ஏற்றிடுவோம்?<br />
அதைக் கண்டு இறைவன் மகிழ்ந்தார்.<br />
அவருள் இணைந்து போற்றிடுவோம்.</p>
<p>இதைக் கேட்கும் நம்பணி என்ன?<br />
இந்த வாழ்வின் பொருளறிவோம்.<br />
உதை பந்தாய்த் துள்ளுதல் அல்ல;<br />
உண்மை ஒளிர அருள்பெறுவோம்!<br />
ஆமென்.
LikeLike ·  · Share

புறாவைப்போல்

நற்செய்தி மாலை: மாற்கு 1:10.
“அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.”

நற்செய்தி மலர்:
சுறாக்கள் சுழலும் நீர்நிலையில்,
சொரியும் கண்ணீர் பெருகுகையில்,
சோர்ந்து அடியேன் விழுகின்றேன்;
சொல்லத் தவித்து அழுகின்றேன்.
புறாக்கள் காட்டும் அமைதியினில்,
பொய்மை அழுக்கு அகற்றுகையில்,
பொறுமை கொண்டு தொழுகின்றேன்;
புனிதா, உம்மால் எழுகின்றேன்!
ஆமென்.

நற்செய்தி மாலை: மாற்கு 1:10. 
"அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்."

நற்செய்தி மலர்:
சுறாக்கள் சுழலும் நீர்நிலையில்,
சொரியும் கண்ணீர் பெருகுகையில்,
சோர்ந்து அடியேன் விழுகின்றேன்;
சொல்லத் தவித்து அழுகின்றேன்.
புறாக்கள் காட்டும் அமைதியினில்,
பொய்மை அழுக்கு அகற்றுகையில்,
பொறுமை கொண்டு தொழுகின்றேன்;
புனிதா, உம்மால் எழுகின்றேன்!
ஆமென்.
LikeLike ·  · Share

இவர்களின் மீட்பை நினைப்பது யார்?

இவர்களின் மீட்பை நினைப்பது யார்?
இவர்களுக்குதவி செய்பவர் யார்?
அவரவர் வழியைப் புகழ்கின்றீர்;
அத்துடன் இவரையும் எண்ணிடுவீர்!
-கெர்சோம் செல்லையா.

இவர்களின் மீட்பை நினைப்பது யார்?
இவர்களுக்குதவி செய்பவர் யார்?
அவரவர் வழியைப் புகழ்கின்றீர்;
அத்துடன் இவரையும் எண்ணிடுவீர்!
-கெர்சோம் செல்லையா.
LikeLike ·  · Share

யோவானைப் பார்!

யோவானைப் பார்!

நற்செய்தி மாலை: மாற்கு:1:7-8.
“அவர் தொடர்ந்து, ‘ என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ‘ எனப் பறைசாற்றினார்.”

நற்செய்தி மலர்:
தனது நீராட்டின் தரமறிந்தார்;
தாழ்மையை யோவான் தரித்திட்டார்.
இனங்களை மீட்கும் பணிசெய்வார்,
எங்கும் தாழ்மை கொண்டிருப்பார்.

எனது செயலே எனப்புகழ்வார்,
இவரைப் பார்த்தால் தாழ்ந்திடுவார்.
கனவு போன்ற உலகினிலே,
கறையை நீக்கி வாழ்ந்திடப் பார்!
ஆமென்.

யோவானைப் பார்!
நற்செய்தி மாலை: மாற்கு:1:7-8.
 "அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார்."

நற்செய்தி மலர்:
தனது நீராட்டின் தரமறிந்தார்;
தாழ்மையை யோவான் தரித்திட்டார்.
இனங்களை மீட்கும் பணிசெய்வார்,
எங்கும் தாழ்மை கொண்டிருப்பார்.

எனது செயலே எனப்புகழ்வார்,
இவரைப் பார்த்தால் தாழ்ந்திடுவார்.
கனவு போன்ற உலகினிலே,
கறையை நீக்கி வாழ்ந்திடப் பார்!
ஆமென்.
LikeLike ·  · Share
  • நற்செய்தி மாலை

    Write a comment…

நல்லுணவு தருகிறார்!

நல்லுணவு தருகிறார்!

நற்செய்தி மாலை: மாற்கு 1:6.
“யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.”
நற்செய்தி மலர்:
பாறைக்குள் உணவைத் 
தேரைக்குத் தந்தார்;
பாலையில் நீரைப் 
பழங்களில் வைத்தார்.
யாருக்குத் தேவை 
எது என்றறிவார்;
இரங்கும் இறைதான், 
இன்றும் தருவார்.
ஆமென்.
நல்லுணவு தருகிறார்!
நற்செய்தி மாலை: மாற்கு 1:6.
"யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்."
நற்செய்தி மலர்:
பாறைக்குள் உணவைத் 
தேரைக்குத் தந்தார்;
பாலையில் நீரைப் 
பழங்களில் வைத்தார்.
யாருக்குத் தேவை 
எது என்றறிவார்;
இரங்கும் இறைதான், 
இன்றும் தருவார்.
ஆமென்.

எந்த நீரால் நீக்கிடலாம்?

நற்செய்தி மாலை: மாற்கு 1:5.
“யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.”

நற்செய்தி மலர்:
உடல்மேல் அழுக்கு படிந்துவிடின்,
ஓராற்றுள் மூழ்கிக் கழுவிடலாம்.
உள்ளில் கறைகள் உறைந்துவிடின்,
எந்த நீரால் நீக்கிடலாம்?
கடல்போல் நீரைக் கொணர்ந்தாலும்,
கறைகள் போக்க வழியில்லை.
கடவுளின் அருள்நீர் கேட்டிடுவோம்;
கருத்தாய் அதனுள் மூழ்கிடுவோம்!
ஆமென்.

நற்செய்தி மாலை: மாற்கு 1:5. 
"யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்."

நற்செய்தி மலர்:
உடல்மேல் அழுக்கு படிந்துவிடின்,
ஓராற்றுள் மூழ்கிக் கழுவிடலாம்.
உள்ளில் கறைகள் உறைந்துவிடின்,
எந்த நீரால் நீக்கிடலாம்?
கடல்போல் நீரைக் கொணர்ந்தாலும்,
கறைகள் போக்க வழியில்லை.
கடவுளின் அருள்நீர் கேட்டிடுவோம்;
கருத்தாய் அதனுள் மூழ்கிடுவோம்!
ஆமென்.

நற்செய்தி மாலை.

நற்செய்தி மாலை.
மாற்கு 1:1-4.
திருமுழுக்கு யோவானின் உரை:

“கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: ‘ இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ‘ என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது. இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.”

நற்செய்தி மலர்:
காட்டில் இறையொலி கேட்கிறதே.
கடவுளின் பாதை தெரிகிறதே.
நாட்டில் வாழும் மனிதரிடம்
நல்வழி திரும்பச் சொல்கிறதே.

ஏட்டில் இதனை வாசித்தோம்;
எத்தனை பேர் நாம் செவிகொடுத்தோம்?
பாட்டில் இனிமேல் பாடிடுவோம்.
பாவம் நீங்கத் திருந்திடுவோம்!
ஆமென்.

நற்செய்தி மாலை.
மாற்கு 1:1-4.
திருமுழுக்கு யோவானின் உரை:

"கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: ' இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ' என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது. இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்."

நற்செய்தி மலர்:
காட்டில் இறையொலி கேட்கிறதே.
கடவுளின் பாதை தெரிகிறதே.
நாட்டில் வாழும் மனிதரிடம் 
நல்வழி திரும்பச் சொல்கிறதே.

ஏட்டில் இதனை வாசித்தோம்;
எத்தனை பேர் நாம் செவிகொடுத்தோம்?
பாட்டில் இனிமேல் பாடிடுவோம்.
பாவம் நீங்கத் திருந்திடுவோம்!
ஆமென்.

மத்தேயுவின் நற்செய்தி கேட்பீரே!

மத்தேயுவின் நற்செய்தி கேட்பீரே!

நல்வாக்கு:மத்தேயு 28:19-20.
“எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் ‘ என்று கூறினார்.”
நல்வாழ்வு:
எல்லா மனிதரும் இறையுருவே;
எந்நிலை இருப்பினும் நம்முறவே.
பொல்லாத் தீமை விட்டிடவே,
புனிதனின் செய்தி உரைப்போமே.
கல்லார் கற்றுத் தெளிவுறவே,
கடவுளின் அரசு அமைந்திடுமே.
நல்லார் கூட்டம் பெருகிடவே,
நன்மை ஆறாய்ப் பாய்ந்திடுமே!
ஆமென்.
 

விண்ணை ஆளும் இறைமகனே!

விண்ணை ஆளும் இறைமகனே!
நற்செய்தி: மத்தேயு 28:16-17.
இயேசு சீடருக்குக் கட்டளை கொடுத்து அனுப்புதல்:
“பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.”
நமது பதில்:
விண்ணில் ஆளும் இறைமகனே,
வீழ்ந்து, பணிந்து, தொழுகின்றேன்.
மண்ணில் வந்து உமைக் கொடுத்து,
மனிதனை மீட்டீர், புகழ்கின்றேன்.
கண்ணில் காணும் நாள் வரையில்
காக்கும் தெய்வம் நீர் அதனால்,
எண்ணம் முழுதும் உமை நிறுத்தி,
எந்நிலையிலும் மகிழ்கின்றேன்!
ஆமென்.

விண்ணை ஆளும் இறைமகனே!
நற்செய்தி: மத்தேயு 28:16-17.
இயேசு சீடருக்குக் கட்டளை கொடுத்து அனுப்புதல்:
"பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்."
நமது பதில்:
விண்ணில் ஆளும் இறைமகனே,
வீழ்ந்து, பணிந்து, தொழுகின்றேன்.
மண்ணில் வந்து உமைக் கொடுத்து,
மனிதனை மீட்டீர், புகழ்கின்றேன்.
கண்ணில் காணும் நாள் வரையில் 
காக்கும் தெய்வம் நீர் அதனால்,
எண்ணம் முழுதும் உமை நிறுத்தி,
எந்நிலையிலும் மகிழ்கின்றேன்!
ஆமென்.
LikeLike ·  ·

உறங்குகையில் தெரிந்திடுமா?

உறங்குகையில் தெரிந்திடுமா?
நல்வாக்கு: மத்தேயு 28:11-15.
காவல் வீரர்கள் வதந்தியைப் பரப்புதல்:
“அவர்கள் போய்க்கொண்டிருந்த போது காவல் வீரருள் சிலர் நகரத்திற்குள் சென்று, நிகழ்ந்தவை யாவற்றையும் தலைமைக் குருக்களுக்கு அறிவித்தனர். அவர்கள் மூப்பர்களுடன் கூடிக் கலந்து ஆலோசித்து அப்படை வீரருக்கு மிகுதியாகப் பணம் கொடுத்து, ″ ‘ நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த போது இயேசுவின் சீடர் இரவில் வந்து அவரது உடலைத் திருடிச் சென்றுவிட்டனர் ‘ எனச் சொல்லுங்கள். ஆளுநர் இதைக் கேள்வியுற்றால் நாங்கள் அவரை நம்பச் செய்து நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி பார்த்துக் கொள்வோம் ″ என்று அவர்களிடம் கூறினார்கள். அவர்களும் பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்களுக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தவாறே செய்தார்கள். இந்நாள் வரை இந்த வதந்தி யூதரிடையே பரவியிருக்கிறது.”

நல்வாழ்வு:
உறங்கும்போது எடுத்தாரென்றால்,
உணர்வில் எடுப்பதைத் தெரிந்தாரோ?
இறங்கி வந்து அடியார் எடுத்தால்,
எடுப்பதைத் தடுக்க மறந்தாரோ?

திறனில்லாது ஓடி ஒளிந்தோர்
தெரிந்தே படைமுன் எடுப்பாரோ?
புறம் கூறிடுவார் பொய்களிலெல்லாம்,
பொருத்தம் இல்லை, அறிவீரோ?
ஆமென்.

உறங்குகையில் தெரிந்திடுமா?<br />
நல்வாக்கு: மத்தேயு 28:11-15.<br />
காவல் வீரர்கள் வதந்தியைப் பரப்புதல்:<br />
"அவர்கள் போய்க்கொண்டிருந்த போது காவல் வீரருள் சிலர் நகரத்திற்குள் சென்று, நிகழ்ந்தவை யாவற்றையும் தலைமைக் குருக்களுக்கு அறிவித்தனர். அவர்கள் மூப்பர்களுடன் கூடிக் கலந்து ஆலோசித்து அப்படை வீரருக்கு மிகுதியாகப் பணம் கொடுத்து, ″ ' நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த போது இயேசுவின் சீடர் இரவில் வந்து அவரது உடலைத் திருடிச் சென்றுவிட்டனர் ' எனச் சொல்லுங்கள். ஆளுநர் இதைக் கேள்வியுற்றால் நாங்கள் அவரை நம்பச் செய்து நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி பார்த்துக் கொள்வோம் ″ என்று அவர்களிடம் கூறினார்கள். அவர்களும் பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்களுக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தவாறே செய்தார்கள். இந்நாள் வரை இந்த வதந்தி யூதரிடையே பரவியிருக்கிறது."</p>
<p>நல்வாழ்வு:<br />
உறங்கும்போது எடுத்தாரென்றால்,<br />
உறங்குகையில் தெரிந்திடுமா?<br />
இறங்கிய கூட்டம் எடுக்கும்போது,<br />
இதைத்தடுக்க மறுத்திடுமா?<br />
திறனில்லாத மனிதர் என்றுத்<br />
தம்மை வீரர் குறைப்பாரா?<br />
அறம் தெரிந்த நண்பர் நீரும்,<br />
அதையறிந்து உரைப்பீரா?<br />
ஆமென்.
LikeLike ·  · Share