இன்று அழைத்தால்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:20.
20 | தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். கிறித்துவில் வாழ்வு: என்று செல்வேன், எப்படிச் செல்வேன், என்று அறியா என் வாழ்வில், இன்று வாயென இறைவன் அழைப்பின், என்ன சொல்லி எதிர் கொள்வேன்? ஓன்று மட்டும் உணர்ந்து சொல்வேன்; என் பணி முடிந்ததா எனக் கேட்டு, நன்கு அப்பணி நானும் முடித்து, நன்றி சொல்லி, உடன் செல்வேன்! ஆமென். |