நான் இருக்கிறேன்!

   

நான் இருக்கிறேன்!

நற்செய்தி: யோவான் 8:56-58.

56உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.57அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.58அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

நல்வழி:

“நான்” என்ற சொல்லின் உறுதி,

நம்பும் இறையில்தான் உண்டு.

வான் வந்த வட்டப் பரிதி

வடிவு மகனிடமும் உண்டு.

ஏன் என்று கேட்கும் தாழ்வு,

இங்கொழிய என்ன உண்டு?

தேன் ஒழுகும் நிலை வாழ்வு,

தெய்வ வாக்கில்தான் உண்டு!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.