யார் உரைப்பார்?

யார் சொல்லக் கூடும்?
நற்செய்தி: யோவான் 8:46. 

நல்வழி: 

என்னில் தீது இல்லையென்று 

என்னால் சொல்லக் கூடுமோ? 

சொன்னால் அது உண்மையென்று,

சொல்கேள் கூட்டம் ஆடுமோ?

இன்னாள் இதனைச் சொல்வதற்கு,

இயேசு தவிர யாருண்டு?

பின்னாள் அவரே நடுவரென்று,

பிழை உணரப் பேருண்டு!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.