யார் சொல்லக் கூடும்?
நற்செய்தி: யோவான் 8:46.
நல்வழி:
என்னில் தீது இல்லையென்று
என்னால் சொல்லக் கூடுமோ?
சொன்னால் அது உண்மையென்று,
சொல்கேள் கூட்டம் ஆடுமோ?
இன்னாள் இதனைச் சொல்வதற்கு,
இயேசு தவிர யாருண்டு?
பின்னாள் அவரே நடுவரென்று,
பிழை உணரப் பேருண்டு!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.