இறைவாக்கும் நிறைவாழ்வும்!

இறைவாக்கு: மத்தேயு 27:1-2.
இயேசுவைப் பிலாத்திடம் கொண்டு செல்லுதல்:
“பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர். அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர்.”

நிறைவாழ்வு:
வடக்கு தெற்கு எதுவென்று
வாழ்வின் உண்மை தெரியாது,
இடக்கு முடக்கு செய்பவர் முன்
இன்று நிற்கும் இனியவரே,

அடக்கு முறையின் துணைகொண்டு
ஆண்டு விழுந்தோர் கூட்டத்துள்
கிடக்க விரும்பிய ஆளுநர் முன்
கிறித்து நின்றதை நினைப்பீரே!
ஆமென்.

இறைவாக்கும் நிறைவாழ்வும்!

இறைவாக்கு: மத்தேயு 27:1-2.
இயேசுவைப் பிலாத்திடம் கொண்டு செல்லுதல்:
"பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர். அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர்."

நிறைவாழ்வு:
வடக்கு தெற்கு எதுவென்று 
வாழ்வின் உண்மை தெரியாது,
இடக்கு முடக்கு செய்பவர் முன் 
இன்று நிற்கும் இனியவரே,

அடக்கு முறையின் துணைகொண்டு 
ஆண்டு விழுந்தோர் கூட்டத்துள் 
கிடக்க விரும்பிய ஆளுநர் முன்
கிறித்து நின்றதை நினைப்பீரே!
ஆமென்.
 

இம்முறை நாங்கள்.

செய்யுட் செய்தி!

இறைவாக்கு: மத்தேயு 26:73-75.
“சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, ‘ உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; ஏனெனில் உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது ‘ என்று கூறினார்கள். அப்பொழுது அவர், ‘ இந்த மனிதனை எனக்குத் தெரியாது ‘ என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று. அப்பொழுது, ‘ சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் ‘ என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.

இறைவேண்டல்:

மும்முறை மறுதலித்த,
முதல்வர் பேதுருபோல்,

எம்முறை என்றறியேன்,
என்வாயும் பேசிடுதே!

அம்முறை உணர்ந்தழுத
அடியாரின் நெஞ்சைப்போல்,

இம்முறை நான் திரும்ப,
என்னைப் பார்த்திடுமே!
ஆமென்.

செய்யுட் செய்தி!</p><br /><br />
<p>இறைவாக்கு: மத்தேயு 26:73-75.<br /><br /><br />
"சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, ' உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; ஏனெனில் உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது ' என்று கூறினார்கள். அப்பொழுது அவர், ' இந்த மனிதனை எனக்குத் தெரியாது ' என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று. அப்பொழுது, ' சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் ' என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.</p><br /><br />
<p>இறைவேண்டல்:<br /><br /><br />
மும்முறை மறுதலித்த, முதல்வர் பேதுருபோல்,<br /><br /><br />
இம்முறை நாங்களுமே இழிவாய்ப் பேசுகிறோம்.<br /><br /><br />
அம்முறை அழுதுணர்ந்த அடியார் நெஞ்சம்போல்,<br /><br /><br />
செம்மறை கேட்பவர்கள் சீராக, இரங்கிடுமே!<br /><br /><br />
ஆமென்.
LikeLike ·  · Share
செய்யுட் செய்தி!<br /><br /><br /><br />
இறைவாக்கு: மத்தேயு 26:73-75.<br /><br /><br /><br />
"சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, ' உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; ஏனெனில் உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது ' என்று கூறினார்கள். அப்பொழுது அவர், ' இந்த மனிதனை எனக்குத் தெரியாது ' என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று. அப்பொழுது, ' சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் ' என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.<br /><br /><br /><br />
இறைவேண்டல்:<br /><br /><br /><br />
மும்முறை மறுதலித்த, முதல்வர் பேதுருபோல்,<br /><br /><br /><br />
இம்முறை நாங்களுமே இழிவாய்ப் பேசுகிறோம்.<br /><br /><br /><br />
அம்முறை அழுதுணர்ந்த அடியார் நெஞ்சம்போல்,<br /><br /><br /><br />
செம்மறை கேட்பவர்கள் சீராக, இரங்கிடுமே!<br /><br /><br /><br />
ஆமென்.
LikeLike · 

பேதுருபோல்

நற்செய்தியும் நாமும்!
இறைவாக்கு:மத்தேயு 26:69-72.
பேதுரு மறுதலித்தல்:
“பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். பணிப்பெண் ஒருவர் அவரிடம் வந்து, ‘ நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே ‘ என்றார். அவரோ, ‘ நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை ‘ என்று அவர்கள் அனைவர் முன்னிலையிலும் மறுதலித்தார். அவர் வெளியே வாயிலருகே சென்றபோது வேறொரு பணிப்பெண் அவரைக் கண்டு, ‘ இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன் ‘ என்று அங்கிருந்தோரிடம் சொன்னார். ஆனால் பேதுரு, ‘ இம்மனிதனை எனக்குத் தெரியாது ‘ என ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார்.”

இறைவேண்டல்:
ஏதுரையால் பேசுவது
என்றறியா வேளையிலே,
தூதுரைகள் நெஞ்சிலிட்டு,
தூயவரே எனக்கிரங்கும்.
சூதுரைகள் சூழ்ந்துவந்து,
துன்பங்கள் தருகையிலே,
பேதுருபோல் வீழாமல்
பொய்நீக்க எனக்கிரங்கும்!
ஆமென்.

நற்செய்தியும் நாமும்!
இறைவாக்கு:மத்தேயு 26:69-72.
பேதுரு மறுதலித்தல்:
"பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். பணிப்பெண் ஒருவர் அவரிடம் வந்து, ' நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே ' என்றார். அவரோ, ' நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை ' என்று அவர்கள் அனைவர் முன்னிலையிலும் மறுதலித்தார். அவர் வெளியே வாயிலருகே சென்றபோது வேறொரு பணிப்பெண் அவரைக் கண்டு, ' இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன் ' என்று அங்கிருந்தோரிடம் சொன்னார். ஆனால் பேதுரு, ' இம்மனிதனை எனக்குத் தெரியாது ' என ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார்."

இறைவேண்டல்:
ஏதுரையால் பேசுவது 
என்றறியா வேளையிலே,
தூதுரைகள் நெஞ்சிலிட்டு,
தூயவரே எனக்கிரங்கும்.
சூதுரைகள் சூழ்ந்துவந்து,
துன்பங்கள் தருகையிலே,
பேதுருபோல் வீழாமல் 
பொய்நீக்க எனக்கிரங்கும்!
ஆமென்.
 

விழிப்பீர் நண்பரே!

விழிப்பீர் நண்பரே!
இறைவாக்கு:
மத்தேயு 26:67-68.
“பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து, ‘ இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்? சொல் ‘ என்று கேட்டனர்.”

இறைவாழ்வு:
பழித்தலும் அழித்தலும்
பாவியர் செயலே.
படைத்தவர் அழித்தலை
விரும்பிட மாட்டார்.
விழித்தலை விரும்பியே
வெறுமையில் நின்றார்.
வேண்டாம் பழிச்சொல்.
விடுவார் வாழ்வார்!
ஆமென்.

விழிப்பீர் நண்பரே!
இறைவாக்கு:
மத்தேயு 26:67-68.
"பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து, ' இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்? சொல் ' என்று கேட்டனர்."

இறைவாழ்வு:
பழித்தலும் அழித்தலும் 
பாவியர் செயலே.
படைத்தவர் அழித்தலை
விரும்பிட மாட்டார்.
விழித்தலை விரும்பியே   
வெறுமையில்  நின்றார்.
வேண்டாம் பழிச்சொல்.
விடுவார் வாழ்வார்!
ஆமென்.

இமயம் மறைக்க முயலும் சுவரே!

 

இறை வாக்கு: மத்தேயு 26:65-66.
“உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு, ‘ இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ‘ என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘ இவன் சாக வேண்டியவன் ‘ எனப் பதிலளித்தார்கள்.”

இனிய வாழ்வு:
உண்மை உரைக்க, விளிப்பதும் இவரே,
உரைக்கும்போது பழிப்பதும் இவரே!
எண்ண மறந்து இகழும் இவரே,
இமயம் மறைக்க முயலும் சுவரே!

பண்புகள் இழந்த பாவியர் உலகே;
பழித்தல் அழித்தல் உனது குறையே.
விண்புகழ் எட்ட விரும்பும் உனையே,
வேண்டிக் கேட்பேன், பேசு முறையே!
ஆமென்.

இமயம் மறைக்க முயலும் சுவரே!

இறை வாக்கு: மத்தேயு 26:65-66.
"உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு, ' இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ' இவன் சாக வேண்டியவன் ' எனப் பதிலளித்தார்கள்."

இனிய வாழ்வு:
உண்மை உரைக்க, விளிப்பதும் இவரே,
உரைக்கும்போது பழிப்பதும் இவரே!
எண்ண மறந்து இகழும் இவரே,
இமயம் மறைக்க முயலும் சுவரே!

பண்புகள் இழந்த பாவியர் உலகே;
பழித்தல் அழித்தல் உனது குறையே.
விண்புகழ் எட்ட விரும்பும் உனையே,
வேண்டிக் கேட்பேன், பேசு முறையே!
ஆமென்.
 

கேட்பாயா தமிழா?

கேட்பாயா தமிழா?

பாண்டியனாண்டான்; சோழன் மாண்டான்.
சோழன் எழுந்து, பகைமை தீர்த்தான்.
ஆண்டான் இப்படி அழித்ததினாலே,
அறம் பொருள் இன்பம் தமிழனிழந்தான்.

மீண்டும் சக்கரம் சுழல்வதைத் தடுப்பீர்;
மேலோன் கீழோன் எண்ணம் விடுப்பீர்;
கூண்டாய், கொத்தாய் அழியாதிருக்கக்
கூடிவாழக் கற்று நடப்பீர்!

கேட்பாயா தமிழா?</p><br />
<p>பாண்டியனாண்டான்; சோழன் மாண்டான்.<br /><br />
சோழன் எழுந்து, பகைமை தீர்த்தான்.<br /><br />
ஆண்டான் இப்படி அழித்ததினாலே,<br /><br />
அறம் பொருள் இன்பம் தமிழனிழந்தான்.</p><br />
<p>மீண்டும் சக்கரம் சுழல்வதைத் தடுப்பீர்;<br /><br />
மேலோன் கீழோன் நினைப்பதை விடுவீர்.<br /><br />
கூண்டாய், கொத்தாய் அழியாதிருக்கக்<br /><br />
கூடிவாழக்  கற்று நடப்பீர்!
LikeLike ·  · Shareகேட்பாயா தமிழா?

இறைவனின் ஆவி பெறவேண்டும்.

இறைவாக்கு கேட்போமா?
இறையருள் பெறுவோமா?

இறை வாக்கு: மத்தேயு 26:62-64.
“அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம், ‘ இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா? ‘ என்று கேட்டார். ஆனால் இயேசு பேசாதிருந்தார். மேலும் தலைமைக் குரு அவரிடம், ‘ நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன் ‘ என்றார். அதற்கு இயேசு, ‘ நீரே சொல்லுகிறீர்; மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார்.”

இறைவாழ்வு:
இந்தக் கேள்வியின் பதிலை அறிய,
இறைவனின் ஆவி பெறவேண்டும்.
மைந்த னிறையை யார் என்றறிய,
மனதை நாமும் தரவேண்டும்.

சொந்த இனமே சிலுவையில் கொல்ல,
சொல்வதை இன்று கேட்பவர் யார்?
அந்த நாளில் அவர் வரும்போது
அழாதிருக்க, இயேசுவைப் பார்!
ஆமென்.

இறைவாக்கு கேட்போமா? 
இறையருள் பெறுவோமா?

இறை வாக்கு: மத்தேயு 26:62-64.
"அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம், ' இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா? ' என்று கேட்டார். ஆனால் இயேசு பேசாதிருந்தார். மேலும் தலைமைக் குரு அவரிடம், ' நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன் ' என்றார். அதற்கு இயேசு, ' நீரே சொல்லுகிறீர்; மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்."

இறைவாழ்வு:
இந்தக் கேள்வியின் பதிலை அறிய, 
இறைவனின் ஆவி பெறவேண்டும்.
மைந்த னிறையை யார் என்றறிய,
மனதை நாமும் தரவேண்டும்.

சொந்த இனமே சிலுவையில் கொல்ல,
சொல்வதை இன்று கேட்பவர் யார்?
அந்த நாளில் அவர் வரும்போது 
அழாதிருக்க, இயேசுவைப் பார்!
ஆமென்.
 

தவற்றை நினைப்பீரா?

நல்வாழ்த்து:
மேன்மேலும் உம்மைப் புகழ்வேன்;
மேன்மை தங்கிய என் அரசே.
நான் பாடத் தகுதியற்றேன்;
எனினும் புகழ்வேன், உம் அரசே!

நல்வாக்கு:
மத்தேயு 26:59-61.
“தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர். பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர். அவர்கள், ‘ இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான் ‘ என்று கூறினார்கள்.”

நல்வாழ்வு:
புனிதரின் பணியைச் செய்பவர்கூட
பொய்ச் சான்றுரைக்க நாடுகிறார்.
இனிமை என்கிற இறைப்பணி இதனால்
இழப்பு அடையவே வாடுகிறார்.
மனிதனை மனிதன் என மதிக்காத
மடமையில் கடவுளைக் காண்பீரா?
தனிமையில் அமர்ந்து தவற்றை நினைத்து,
தந்தையின் அருளைக் கேட்பீரா?
ஆமென்.

நல்வாழ்த்து:
மேன்மேலும் உம்மைப் புகழ்வேன்;
மேன்மை தங்கிய என் அரசே.
நான் பாடத் தகுதியற்றேன்;
எனினும் புகழ்வேன், உம் அரசே!

நல்வாக்கு:
மத்தேயு 26:59-61.
"தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர். பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர். அவர்கள், ' இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான் ' என்று கூறினார்கள்."

நல்வாழ்வு:
புனிதரின் பணியைச் செய்பவர்கூட 
பொய்ச் சான்றுரைக்க நாடுகிறார்.
இனிமை என்கிற இறைப்பணி இதனால் 
இழப்பு அடையவே வாடுகிறார்.
மனிதனை மனிதன் என மதிக்காத  
மடமையில் கடவுளைக் காண்பீரா? 
தனிமையில் அமர்ந்து தவற்றை நினைத்து,
தந்தையின் அருளைக் கேட்பீரா?
ஆமென்.
 

வாழ்வின் பொருள்

நல்வாழ்த்து:
வாழ்வின் பொருள் என்னவென்று,
வழி தெரியாது கேட்பவரே,
தாழ்வில் நம்மை நினைத்துயர்த்தும்,
தந்தை இறையைப் புகழுவதே!

நல்வாக்கு:
மத்தேயு 26:57-58.
தலைமைச் சங்கத்தின் முன்னிலையில் இயேசு:
“இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வந்தார்கள். பேதுரு தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து வழக்கின் முடிவைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருந்தார்.”

நல்வாழ்வு:
கற்றவர் என்று காட்டுகிறார்;
கயமைத்தனத்தையே கூட்டுகிறார்.
மற்றவர் தன்மையை மதியாது,
மடையர் என்று ஆட்டுகிறார்!
பெற்றது அறிவாய் இருக்குமெனில்,
பெருந் தன்மையைக் கொண்டிருப்பார்.
கொற்றவர் இறைவன் கூற்றறிந்து,
கொடுமையை நீக்கி ஆண்டிடுவார்!
ஆமென்.

நல்வாழ்த்து:
வாழ்வின் பொருள் என்னவென்று,
வழி தெரியாது கேட்பவரே,
தாழ்வில் நம்மை நினைத்துயர்த்தும்,
தந்தை இறையைப் புகழுவதே!

நல்வாக்கு: 
மத்தேயு 26:57-58.
தலைமைச் சங்கத்தின் முன்னிலையில் இயேசு:
"இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வந்தார்கள். பேதுரு தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து வழக்கின் முடிவைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருந்தார்."
நல்வாழ்வு:
கற்றவர் என்று காட்டுகிறார்;
கயமைத்தனத்தையே கூட்டுகிறார்.
மற்றவர் தன்மையை மதியாது,
மடையர் என்று ஆட்டுகிறார்!
பெற்றது அறிவாய் இருக்குமெனில், 
பெருந் தன்மையைக் கொண்டிருப்பார்.
கொற்றவர் இறைவன் கூற்றறிந்து,
கொடுமையை நீக்கி ஆண்டிடுவார்!
ஆமென்.
 

இறைவன் நம்முடனே.

நல்வாழ்த்து:
கண்டு நம்பும் மாந்தர் உண்டு;
காணா இறையை நம்பிடுவோம்.
உண்டு ருசிக்கும் விருப்பு கொண்டு,
ஊட்டும் இறையைக் கும்பிடுவோம்!

நல்வாக்கு:
மத்தேயு 26:55-56.
“அவ்வேளையில் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ‘ கள்வனைப் பிடிக்க வருவதுபோல் வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைதுசெய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் அமர்ந்து கற்பித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; இறைவாக்கினர் எழுதியவை நிறைவேறவே இவையனைத்தும் நிகழ்கின்றன ‘ என்றார்.அப்பொழுது சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள்.”

நல்வாழ்வு:
இக்கட்டு, துன்ப வேளையிலே,
எத்தனைபேர் நம் உடனிருந்தார்?
பக்கத்தில் வந்து பார்த்தவரே,
பாய்ந்து அம்பாய்ப் பறந்துவிட்டார்!
திக்கற்று நாம் நிற்கையிலே,
தெய்வம் மட்டும் துணை வந்தார்.
எக்காலத்தும் நினைப்பீரே;
இறைவன் நம்முடன் இருக்கின்றார்!
ஆமென்.

நல்வாழ்த்து:
கண்டு நம்பும் மாந்தர் உண்டு;
காணா இறையை நம்பிடுவோம்.
உண்டு ருசிக்கும் விருப்பு கொண்டு,
ஊட்டும் இறையைக் கும்பிடுவோம்!

நல்வாக்கு:
மத்தேயு 26:55-56.
"அவ்வேளையில் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ' கள்வனைப் பிடிக்க வருவதுபோல் வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைதுசெய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் அமர்ந்து கற்பித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; இறைவாக்கினர் எழுதியவை நிறைவேறவே இவையனைத்தும் நிகழ்கின்றன ' என்றார்.அப்பொழுது சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள்."

நல்வாழ்வு:
இக்கட்டு, துன்ப வேளையிலே,
எத்தனைபேர் நம் உடனிருந்தார்?
பக்கத்தில் வந்து பார்த்தவரே,
பாய்ந்து அம்பாய்ப் பறந்துவிட்டார்!
திக்கற்று நாம் நிற்கையிலே,
தெய்வம் மட்டும் துணை வந்தார்.
எக்காலத்தும் நினைப்பீரே;
இறைவன் நம்முடன் இருக்கின்றார்!
ஆமென்.