செவி திறப்போம்!

செவி திறப்போம்!

நற்செய்தி: யோவான் 8:47.

நல்வழி:


முன்னர் படைத்தது மண்ணிற்காக. 

முதலில் இருந்தது இப்படியாக. 

பின்னர் படைப்பது விண்ணிற்காக. 

பிறப்போம் நாமும் அப்படியாக. 

இன்னரும் பேறு பெறுவதற்காக,

இரண்டு செவியும் திறப்போமாக.

சொன்னவர் இயேசு, அருள்வாராக. 

சொற்படி வாழ்ந்து சிறப்போமாக!


ஆமென்.

-கெர்சோம் செல்லையா.