பழிச் சொற்கள்!

பழிச்சொற்கள்!
நற்செய்தி: யோவான் 8:48-49. 

நல்வழி:


தொண்டு வாழ்வின் தூய்மை புரியார்,

தொண்டின் ஊற்றைத் தூற்றிடுவார். 

உண்டு கொழுப்பதை உயர்வாய் நினைப்பார்,

உண்மையைப் பொய்யாய் மாற்றிடுவார். 

கண்டு கொள்ளாதவராகத் தெரியும்,

கடவுள் நடுவாராய் வீற்றிடுவார். 

வண்டு பறப்பது போல் பழி ஓடும்;

வான் புகழாரமும் சாற்றிடுவார்! 

ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

செவி திறப்போம்!

செவி திறப்போம்!

நற்செய்தி: யோவான் 8:47.

நல்வழி:


முன்னர் படைத்தது மண்ணிற்காக. 

முதலில் இருந்தது இப்படியாக. 

பின்னர் படைப்பது விண்ணிற்காக. 

பிறப்போம் நாமும் அப்படியாக. 

இன்னரும் பேறு பெறுவதற்காக,

இரண்டு செவியும் திறப்போமாக.

சொன்னவர் இயேசு, அருள்வாராக. 

சொற்படி வாழ்ந்து சிறப்போமாக!


ஆமென்.

-கெர்சோம் செல்லையா.