இறை அறிவு!

இறையறிவு!

நற்செய்தி: யோவான் 8:54-55. 54.

இயேசு பிரதியுத்தரமாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.55. ஆயினும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன்; அவரை அறியேன் என்று சொல்வேனாகில் உங்களைப்போல நானும் பொய்யனாயிருப்பேன்; அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டிருக்கிறேன்.

நல்வழி:

இறை அறிவுள்ளவர் நீவிர் என்றால்,

ஏன் இறுமாப்பு கொண்டுள்ளீர்?

குறை குற்றங்கள் பிறரில் கண்டால்,

குறுமதி உணவே உண்டுள்ளீர்.

முறை தவறாமல் முழங்கால் நின்றால்,

முதலில் உள்வினை கண்டிடுவீர்.

நிறைவறிவாகிய நேர்மை வந்தால்,

நிமிர்ந்து, நன்மை பண்ணிடுவீர்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.