யார் குற்றம்?

நற்செய்தி: யோவான் 9:1-3.

நல்வழி:

பெற்றோர் தவறா, பிள்ளை தவறா?

பேசிப் பொழுதை வீணாக்கி,

மற்றோர் மீது பழியைப் போடும்,

மனித அறிவியல் ஆன்றோரே,

அற்றோர் வாழ்வின் வறுமை போக்க,

அறிவால் உதவி செய்கின்ற,

கற்றோர் வழியை நீவிர் கண்டு,

கடை பிடிப்பின், சான்றோரே!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.