வேண்டும் கிறித்துவிற்கு, இவர்களுந்தான்!

வேண்டும் கிறித்துவிற்கு, இவர்களுந்தான்!

நற்செய்தி மாலை: மாற்கு 5:1-5.

“அவர்கள் கடலுக்கு அக்கரையிலிருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள். இயேசு படகைவிட்டு இறங்கிய உடனே தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார். கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால்கூடக் கட்டி வைக்க முடியவில்லை. ஏனெனில், அவரைப் பல முறை விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டியிருந்தும் அவர் சங்கிலிகளை உடைத்து விலங்குகளைத் தகர்த்து எறிந்தார். எவராலும் அவரை அடக்க இயலவில்லை. அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார்.”

நற்செய்தி மலர்:

கட்டிப் போட்டாலும் உதறுகின்றார்;

கல்லறை வீடாக்கிக் கதறுகின்றார்.

கெட்டுப் போனவராய்க் குதறுகின்றார்;

கீழ்மக்கள் என்றாகிப் பதறுகின்றார்.

விட்டுச் செல்லாதீர், இவர்களைத்தான்;

வேண்டும் கிறித்துவிற்கு, திருந்தத்தான்.

எட்டுத் திசைகளிலும் புகழைத்தான்,

இவர்களும் உரைப்பார், இயேசுவில்தான்!

ஆமென்.

நற்செய்தி மாலை's photo.
  • Comments
  • நற்செய்தி மாலை

    Write a comment…