நெஞ்சே கலங்காதே!

கலங்காதிரு நெஞ்சே!
இறை வாக்கு: யோவான் 14:1.

  1. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.

இறை வாழ்வு:

அச்சமும் ஐயமும் அகத்தின் நோய்கள்,
ஆண்டவர் இருக்க ஏன் கொண்டாய்?
எச்சமாய் இவைகள் இருப்பதினாலே,
எண்ணிலடங்காத் தீங்குண்டாய்.
பச்சிலை மரத்தில் கனிகள் பிறக்க,
பாயும் கீழடி வேர் பெறுவாய்.
உச்சியின் மேலே வாழ்வு சிறக்க,
உண்மைப்பற்று உள்ளுறுவாய்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.