உடன் இருப்பவர்!

உடன் இருப்பவர்!

இறைவாக்கு: யோவான் 13:18-19.

  1. உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
  2. அது நடக்கும்போது நானே அவரென்று நீங்கள் விசுவாசிக்கும்பொருட்டு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இறைவாழ்வு:

படை எடுத்து வருபவரை,
பகைவர் என்னலாம்.
உடனிருந்து கெடுப்பவரை,
என்ன சொல்லலாம்?
நடை காக்கும் நம்மிறையை,
நம்பிச் செல்லலாம்.
கடை விரிக்கும் கயவரினை,
கட்டச் சொல்லலாம்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.