பெரியோரை மதிப்போம்!
இறைவாக்கு: யோவான் 13: 16-17.
- மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.
- நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
இறை வாழ்வு:
வேலை கொடுத்த முதலாளியை நாம்
வேண்டா வெறுப்பில் பார்க்கிறோம்.
நூலை அறியா முட்டாள் என்றும்,
நெஞ்சுள் திட்டித் தீர்க்கிறோம்.
வாலை வைத்து, தலையையளக்கும்,
வழி முறையால்லே தோற்கிறோம்.
பாலை தாழ்ச்சி, சோலை மகிழ்ச்சி;
பார்த்தறிந்தோம், ஏற்கிறோம்!
-ஆமென்.
-கெர்சோம் செல்லையா.