பெரியோரை மதிப்போம்!

பெரியோரை மதிப்போம்!

இறைவாக்கு: யோவான் 13: 16-17.

  1. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.
  2. நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

இறை வாழ்வு:

வேலை கொடுத்த முதலாளியை நாம்
வேண்டா வெறுப்பில் பார்க்கிறோம்.
நூலை அறியா முட்டாள் என்றும்,
நெஞ்சுள் திட்டித் தீர்க்கிறோம்.
வாலை வைத்து, தலையையளக்கும்,
வழி முறையால்லே தோற்கிறோம்.
பாலை தாழ்ச்சி, சோலை மகிழ்ச்சி;
பார்த்தறிந்தோம், ஏற்கிறோம்!  

-ஆமென்.

-கெர்சோம் செல்லையா. 

மாதிரி யார்?

எனக்கு மாதிரி யார்?

இறைவாக்கு: யோவான் 13: 12-15.12. அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?13. நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.14. ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.15. நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.

இறைவாழ்வு:

பாதிரியார் பலர் உண்டு;

பார்க்கிறோமே இன்று.

மாதிரி யார் யாருண்டு?

மறுபடி சொல் நின்று.

தீதளிப்பார் நிலை கண்டு,

திருப்பிடுவாரன்று.

தூதாகச் செயல் கொண்டு,

துணையிருப்பார் நன்று!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா!

All reactions:9Victor Raj, Bhavani Jeeja and 7 others