மைத்துனர்!

மைத்துனர் விக்டர் மோகன் சுந்தர் அவர்கள்!

எந்தையும் தாயும் காத்தது போன்று,

என்னைப் பார்த்த விக்டர் இவர்.

மைந்தனுக்களிக்கும் மனப் பாங்கோடு,

மகிழ்ந்துதவிய மோகன் இவர்.

சிந்தையில் கூட கெடுதலெண்ணாது,

சிறியரைக் காத்த சுந்தர் இவர்.

விந்தை கிறித்து இறையுள் இணைந்த,

விக்டர் மோகன் சுந்தர் இவர்!

-கெர்சோம் செல்லையா.