அனுப்பும் ஆண்டவரே!

அனுப்பப்பட்டவர்!

இறைவாக்கு: யோவான் 13:20.

  1. நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

இறை வாழ்வு:

அழைக்கும் இறைவன் அனுப்பாதிருந்தும்,
அலைகிறார் பலபேர்; நன்றன்று.
பிழைப்பிற்கான வழியென நினைத்தும்,
பிரித்துச் செல்கிறார்; நன்றன்று.
உழைக்க அனுப்பும் இடத்தில் தூங்கும்,
இன்றைய அமைப்பும் நன்றன்று.
கழைக்கூத்தாடும் காட்சிகள் போதும்;
கனி கொடுப்பதே நன்றின்று!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.