எண்ணம் அறிந்தவரே!

எண்ணம் அறிந்தவரே !

இறைவாக்கு: யோவான் 13:26-28.

26. இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.

27. அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்.

28. அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் ஒருவனும் அறியவில்லை.

இறை வாழ்வு:

மங்கலமாயினும், அமங்கலமாயினும்,

மனதின் எண்ணம் நீர் அறிவீர்.

எங்கள் செயலின் விளைச்சல் பயனும்,

எந்நாளென்றும் நீர் தெரிவீர்.

இங்ஙனம் யாவும் அறிகிற இறையே,

ஏன் நீர் இதனைத் தடுக்கவில்லை?

அங்ஙனமாயினும், நன்மையாய் மாற்றும்,

அருளாயிருப்பதால், கெடுக்கவில்லை!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.