கயவனையும் கழுவுதல்!

கயமை அறிதல்!

இறைவாக்கு: யோவான் 13:11.

  1. தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார்.

இறைவாழ்வு:

என்னுடன் இருப்போன் உள்ளிலென்ன,
என்னறிவிற்குத் தெரியலையே.
தன்னுடன் வளர்க்கும் கேடு மறைத்து,
தாழ விழுந்து கிடப்பானே!
முன்னொரு நாளில் யூதாசுள்ளில்,
முளைத்த கயமை அறிந்தவரே,
அன்பால் அவனைக் கழுவிய உம்மை
அறிந்து, நானும் நடப்பேனே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.