கிறித்து மார்பில்!

கிறித்து மார்பில்!

இறைவாக்கு: யோவான் 13: 23-25.

23. அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்.

24. யாரைக்குறித்துச் சொல்லுகிறாறென்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான்.

25. அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான்.

இறைவாழ்வு:

பாய்ந்து ஓடும் காட்டாறைப் போல்
பக்குவம் இன்றி ஓடுகிறேன்.
சாய்ந்து மகிழ இடமில்லாமல்,
சகதி சேறும் தேடுகிறேன்.
மேய்ந்து இளைப்பாறும் வீடாய்,
மெய்யடியாரை அணைப்பவரே,
காய்ந்து நானும் கடக்கும் முன்பே,
கழுவி நெஞ்சில் இணைப்பீரே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.