ஆன்மீகம் என்பது என்ன?

இறை மாட்சியுறுதலே ஆன்மிகம்!

இறைவாக்கு: யோவான் 13: 31-32.

  1. அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்.
  2. தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாய் அவரை மகிமைப்படுத்துவார்.

இறையறிவு:

ஆன்மயியல் அறிவறிய,
அலைகின்ற மானிடனே,
மேன்மையுற கிறித்துரைத்த,
மெய்வழி காட்டுகிறேன்.
ஏன் பிறந்தேன் என்பதற்கு,
ஏற்ற பதில் கேட்போனே,
நான் அவர்போல் இறைமாட்சி,
நல்கவே கூட்டுகிறேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.